சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் அஞ்சல் துறையின் மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கினைத் துவங்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம் மாவட்டத்தில் 2022-2023ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி […]
சேலம் மாவட்டத்தில் SSC-CGL. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.05.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 7,500 -ற்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று […]
2024-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகளுக்கான இணையவழி பரிந்துரைகள் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பதற்கான கடைசி தேதி 2023 செப்டம்பர் 15-ம் தேதியாகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ராஷ்ட்ரிய புரஸ்கார் தளத்தில் (https://awards.gov.in) அளிக்கலாம். பத்ம விருதுகள், அதாவது பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று […]
சென்னை ஐஐடியில் இன்று ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சென்னை ஐஐடியின் தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி (ஐசி & எஸ்ஆர்) அலுவலகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் ராமானுஜம் மையமும் மற்றும் சென்னை ஐஐடியும் இணைந்து “அடுத்த தலைமுறைக்கான லேசர் அமைப்புகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை இன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் […]
கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கேரளா மாநிலம் திருநாவாயா மற்றும் திரூர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதில் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் […]
இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என பாட்னா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, பாட்னா மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது […]
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 விண்ணப்பங்கள் மத்திய அரசு வரவேற்றுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாகவும், அவை மேலும் கூடுதலான உயர்நிலையை அடைவதற்கு ஊக்கப்படுத்தவும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை வழங்குகிறது. இதன்படி, தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 வழங்குவதற்கு தொழில்துறை விருது, உற்பத்தி தொழில்துறை, சேவை தொழில்துறை, தொழில்களில் சிறப்பு பிரிவு மாநில விருது, மாவட்ட […]
2023 ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,87,035 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.38,440 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.47,412 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.89,158 கோடி செஸ் ரூ. 34,972 கோடியாக உள்ளது என்று முக்கிய அரசு தெரிவித்துள்ளது. ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.45,864 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.37,959 கோடியும் அரசு கொடுத்துள்ளது. ஏப்ரல் 2023ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ.84,304 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.85,371 […]
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பி.எஸ் அளித்துள்ளார். இது குறித்து ஓ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில்; அதிமுகவில் கழக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும், கழகத்தின் நிரந்தரப் பொதுச் […]