தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் புற்றுநோயில் கடந்த 8 மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.எஸ்.சக்கரவர்த்தி ராசி, வாலி, சிட்டிசன், ரெட், வில்லன், ஜி, வரலாறு என அஜித் நடித்த படங்களை தயாரித்தவர். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் […]
விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழுக் கூட்டம் நடைபெற்றது. சர்வதேச விமானப் போக்குவரத்து மூலம் வெளியேறும் கரியமிலவாயு உமிழ்வை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் வலியுறுத்தி வருகிறது. மேலும் 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச விமானப் போக்குவரத்தின் கார்பன் உமிழ்வு குறைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானப் […]
கோடைகால விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவுசார்பாக 01.05.2023 முதல் 15.05.2023 வரை மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் தடகளம், கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும்,மாலை 4.30 மணி முதல் 6.30 வரையிலும் நடைபெறும். […]
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை […]
நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. […]
ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் ஆதாருடன் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க வேண்டும். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு, இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய […]
அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 17.05.2023 அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சென்னை என்கிற […]
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில் இன்று முதல் கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள், கடந்த மாதம் நடந்த முடிந்தது. மீதம் உள்ள வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள், 18ம் தேதி முதல் நடைபெற்றது. நேற்றுடன் […]
சமூதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும். பதக்கம் ஆகியவைகளை உள்ளடங்கியதாகும். 2023-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின […]
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் பணியை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. துணை ஆட்சியர், காவல் துணைகண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022ஆம்ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. இதனை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இந்தநிலையில், நேற்று குரூப் 1முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற […]