இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Office Assistant மற்றும் Attendant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு […]
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கை 31, மார்ச், 2023-ன் படி, 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மேலாண்மையின் கீழ், இதுவரை மொத்த சொத்து மதிப்பு ரூ.27,200 கோடியாக உள்ளது. இந்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 8.69 சதவீதம் முதலீட்டு லாபம் […]
சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க இன்று காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து அழைப்புவிடுக்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு […]
பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் நேற்று பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ […]
தருமபுரி மாவட்டத்தில் குளிர்பான கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கோடை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் சாலையோர மற்றும் குளிர் பானகடைகளில், பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது. இந்ததருணத்தில் சாலையோர மற்றும் நிரந்த […]
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு போக்குவரத்துப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் ராகுல் காந்தியின் தேர்தல் […]
மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கை 2023-க்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவக் கருவிகள் துறை சுகாதாரத்துறையின் அத்தியாவசியமான ஒருங்கிணைந்த அமைப்பாக விளங்குகிறது. கொரோனா பெருந்தொற்றின் போது சுவாசக்கருவிகள், பிபிஇ கிட், என்-95 முகக்கவசங்கள் போன்றவற்றின் தயாரிப்புக்கு இந்தத்துறை மிகப்பெரும் பங்களிப்பை செய்தது. இந்நிலையில் மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பொதுசுகாதார […]
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அமைச்சர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் டெல்லி […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடைபிடிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை […]
கனரா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Group Chief Officer, பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் […]