வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவின் ரயில் பயணம் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புக்களுக்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் […]
பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாகும். ஜூலை 1 முதல் புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. வரி முறையை வலுப்படுத்தவும் மோசடிகளைத் தடுக்கவும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த புதிய விதியின் கீழ், உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், நீங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இதுவரை ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதை விரைவில் பெற வேண்டும். இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைத் தடுக்கும் மற்றும் […]
இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து சேவையில் மின்சார வாகன சேவை முன்னணி வகிக்கிறது. தனி நபர் இருசக்கர வாகனங்கள் முதல் பொதுத்துறை பேருந்துகள் வரை பலவும் எலக்ட்ரிக் மயமாகி விட்டன. இதன் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. இந்நிலையில் பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் மூலம் நாட்டின் […]
அரசின் முறையான அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடங்களாக (prayer halls) மாற்றி பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோடவாசல் பகுதியைச் சேர்ந்த ஆயர் எல். ஜோசப் வில்சன் என்பவர், 2024-ஆம் ஆண்டு, தம்முடைய வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் அந்த வீட்டின் மீது மாவட்ட தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அறிவித்துள்ள நிலையில், முதலில் நீங்கள் நிறுத்துங்கள், பின்னர் போர் நிறுத்தம் குறித்து யோசிக்கலாம் என்று ஈரான் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து ஈரான் அல்லது இஸ்ரேலிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான திலீப் தோஷி மாரடைப்பால் காலமானார். இவருக்கு பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். திலீப் தோஷி நேற்று (திங்கள்) லண்டனில் காலமானார். அவருக்கு வயது 77. பல தசாப்தங்களாக லண்டனில் வசித்து வந்த திலீப் தோஷி, மாரடைப்பால் இறந்தார். அவரது மரணச் செய்தி கிரிக்கெட் […]
பேரீச்சம்பழம் அல்லது கஜூர் என்று பிரபலமாக அழைக்கப்படும் பேரீச்சம்பழம், உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், செரிமானம், இருதய ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு கூட சிறந்தது. மருத்துவர்கள் தினமும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட அறிவுறுத்தினாலும், அதனுடன் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. நீங்கள் பேரீச்சம்பழத்தை விதை அகற்றிய பின்பு அதன் உள்ளே உள்ளதை […]
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில், ரிஷப் பந்த் வரலாற்றில் தனது பெயரை பொறித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வமான சாதனையை அவர் நிகழ்த்தினார் . அதாவது போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து, செம்மையான படைப்பு மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். சிவப்பு பந்து (red-ball cricket) போட்டிகளில் இது அவரின் மிக முக்கியமான சாதனைகளில் […]
கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவ தளம் மீதான ஈரான் தாக்குதல் குறித்து அதிபர் டொனால்டு […]
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. குறிப்பாக போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் […]

