ஈரான் கடந்த ஆண்டில் மட்டும் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், அதன் துணை கமிஷனர் நட அல்நாஸிப் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஈரானில் கடந்த 2024ல் மொத்தம் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துாக்கிலிடுவதன் […]

அமெரிக்க குடிமக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் மோசடியாக குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) கடுமையாக்கியுள்ளது . இந்த மோசடி இப்போது முழு அளவிலான தொழிலாக மாறியுள்ளது என்றும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்காவில் விரைவான நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான சிரமமற்ற வழியாக திருமண அடிப்படையிலான க்ரீன் கார்டுகள் (Marriage Green Cards) கருதப்படுகின்றன. […]

ஈரானில் சிக்கித் தவித்த 110 இந்திய மாணவர்கள் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளனர். இந்த மாணவர்களில் பெரும்பாலோர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்கள் உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். மாணவர்கள் புதன்கிழமை மாலை ஆர்மீனியா மற்றும் தோஹா வழியாக டெல்லி விமானம் மூலம் வந்தனர். இருப்பினும், அவர்களின் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் […]

ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது. சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, இந்த நிலநடுக்கம் கடலோரத்தில் நிகழ்ந்ததாகவும், அதன் மையப்பகுதி 42.8° வடக்கு அட்சரேகையிலும் 146.4° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்தது. தற்போது வரை, சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை […]

அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு , விமான நிலையங்களுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள விமானப் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வரைவு விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் முன்மொழியப்பட்ட விமான விதிகள், நேற்று (ஜூன் 18) அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட விமான நிலைய மண்டலங்களில் உயர வரம்புகளை மீறும் […]

உலகத்தில் நரகம் எது என்றால் அது காசாதான் என நிச்சயமாக சொல்லிவிடலாம். அப்படி ஒரு பரிதாபமான, மோசமான நிலைக்கு அப்பகுதி தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் காசாவின் கட்டடங்கள் சரிந்து கிடக்கும் நிலையில் அங்குள்ள மக்களுக்கு செல்லும் உணவுகளும் மருந்துகளும் தடுக்கப்பட்டுள்ளன. ஐநா போன்ற அமைப்புகள் தரும் சிறிதளவு உணவுக்காக தட்டை ஏந்தி கிலோ மீட்டர் கணக்கில் அலையும் பரிதாப நிலையில் காசா மக்கள் உள்ளனர். பசியாற உணவு தேடி […]

“ஈரான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது; ஆனால் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் தாமதமாகிவிட்டது ” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அதன் அணுசக்தி மையங்களை இலக்காகக் கொள்ளவோ திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் “அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த பேச்சு உலக நாடுகளிடையே […]

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 18, 2025) கனடாவிலிருந்து குரோஷியாவை சென்றடைந்தார். குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சுடனான சந்திப்பின்போது, ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இஸ்ரேல்-ஈரான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, எந்தவொரு பிரச்சினைக்கும் போர்க்களத்திலிருந்து தீர்வு வர முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். உலகின் எந்தவொரு நாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மரியாதை அவசியம் என்று அவர் கூறினார். […]

வேலை கலாச்சாரத்தில் கேஜெட்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. அத்தகைய ஒரு கேஜெட் லேப்டப். பணியிடங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும் வைத்து வேலை செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. அலுவலக வேலைகளை முடிப்பதாக இருந்தாலும் சரி, படிப்பதாக இருந்தாலும் சரி, லேப்டாப்பின் தேவை அதிகரித்துள்ளது. திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் இது ஒரு பிரபலமான கேஜெட்டாக மாறிவிட்டது. ஆனால் இந்த கேஜெட்டின் தீமைகள் உங்களுக்குத் தெரியுமா? இது பெண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இந்த ஆபத்து என்ன, […]

ஏர் இந்தியா நிறுவனம், அடுத்த சில வாரங்களுக்கு நீண்ட தூர மற்றும் மிக நீண்ட தூர இடங்களை இணைக்கும் அகலமான உடல் விமானங்களில் சர்வதேச சேவைகளை 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்தக் குறைப்பு இப்போது முதல் ஜூன் 20 வரை செயல்படுத்தப்படும், அதன் பிறகு குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது. DGCA-வினால் போயிங் 787 விமானங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகரிக்கப்பட்ட கண்காணிப்பு, மேற்கு ஆசியாவில் […]