ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி நேன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் […]

1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கொனேட்டம்பட்டுவில் பிறந்தவர் எஸ்பிபி. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்பிபி என்றும், பாலு என்றும் மக்களிடையே பிரபலமான அவரின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். அவரது பெற்றோர் பெயர் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா. சிறு வயது முதலே இசையுடன் வளர்ந்தார் எஸ்பிபி. பொது நிகழ்ச்சிகளிலும் பாடி பரிச்சயம் பெற்றார். முறையான சாஸ்திரீய சங்கீதம் கற்கவில்லை என்றாலும் […]

சாமி கும்பிடும்போது சிலருக்குக் கொட்டாவி வருவதையும், கண்ணீர் வருவதையும் பார்த்திருப்போம். சில சமயங்களில் சாமி சிலையிலிருந்து பூ விழுவது, மணியோசை கேட்பது போன்ற விஷயங்களும் நடைபெறும். இதற்கான பலன்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம். கோயிலுக்குச் செல்வதற்கான முக்கியமான காரணம், நம் குறைகளை கடவுளிடம் சொல்லவும், நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறினால், அதற்கான பரிகாரத்தைச் செய்யவுமே செல்வோம். இன்னும் சிலர் மனநிம்மதி தேடி கோயிலுக்குச் செல்லும் வழக்கம் உண்டு. அவ்வாறு கோயிலில் […]

ஒருமுறை குரு பிரகஸ்பதி இந்திரன் மீது கோபம் கொண்டார். இதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அரக்கர்கள் தேவலோகத்தைத் தாக்கினர். அப்போது இந்திரன் ராஜ்ஜியத்தை விட்டு ஓடி பிரம்மாவை அணுகினார். அப்போது பிரம்மா இந்திரனிடம் “உனக்கு இராஜ்ஜியம் கிடைக்க வேண்டுமென்றால் நீ ஒரு முனிவருக்கும் பணிவிடை செய்ய வேண்டும். அந்த முனிவர் மனம் மகிழ்ந்து போனால் உனக்கு உன் ராஜ்ஜியம் கிடைக்கும்” என்றார். அவரின் அறிவுரை படி ஒரு முனிவருக்கு இந்திரன் […]

அறுபடை முருகன் கோயில்களில் மூன்றாம் படை வீடு பழனி ஆகும். அங்கு முருகன் காலை மாலை என பல கோலங்களில் காட்சி தருகிறார். மேலும் அங்கு முருகனை ஆண்டி கோலத்தில் பார்த்து தரிசனம் செய்யும் பொழுது நாம் ஆண்டி ஆகி விடுவோம் என்று பொதுவான தவறான கருத்து நிலவி வருகிறது. அது உண்மைதானா என்பது பற்றி பார்ப்போம். போகர் சித்தர் பழனி தண்டாயுதபாணி சிலை வடிவமைக்கும் போதே அவர் ஆண்டிக் […]

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5% ஆகக் குறைக்கும் என்று நோமுரா கணித்துள்ளது. உலகளாவிய தரகு நிறுவனமான நோமுராவின் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள்,ரெப்போ விகிதத்தை முழு சதவீதப் புள்ளியால் – 6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வாய்ப்புள்ளது. ‘ஆசியா H2 அவுட்லுக்’ அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ரிசர்வ் வங்கியின் கணிக்கப்பட்ட 6.5 […]

கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம். பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். […]

வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளின் தொல்லை என்பது பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாகும். இவை உணவுப் பொருட்களையும், சமையலறையையும் அசுத்தப்படுத்துவதோடு, சுகாதாரக் கேடுகளையும் விளைவிக்கின்றன. சந்தையில் கிடைக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. ஆனால், இப்போது நாம் பார்க்கப்போகும் எளிய தீர்வு, உங்கள் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதற்குத் தேவைப்படுவது பச்சை மிளகாயின் காம்புகள் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் மட்டுமே. முதலில், பச்சை மிளகாயின் காம்புகளை […]

இந்த நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். சில பெற்றோர்கள் தக்கள் பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலேயே ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாகவும், ஸ்மார்ட் போன்கள் மூலம் அதிக தகவல்களை அவர்கள் தெரிந்துக்கொள்வதாகவும் நினைக்கின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் செல்போன் பார்ப்பது சுமார் 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த […]

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தன. இதையடுத்து பதற்றம் அதிகரித்ததால் இருநாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் […]