கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), நாடு தழுவிய விமான நிலைய பாதுகாப்பு தணிக்கையை தொடங்கியுள்ளது. இது மும்பை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட, DGCA அறிக்கையின்படி, அகமதாபாத் விபத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில் ஆபத்தான குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மங்கிபோன […]

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய திருப்பூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், […]

லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பென் டக்கெட்டின் 149 ரன்களின் அற்புதமான சதத்தின் அடிப்படையில், இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து […]

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைகள் முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். அதிலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை கூடுதல் சிறப்புடையதாகும். தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையை போல் ஆனி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்புடையதாகும். இதை ஆஷாட அமாவாசை என்றும் சொல்லுவதுண்டு. அமாவாசை திதி, ஒரு குறிப்பிட்ட கிழமைகள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து வரும் போது அது அதிக சிறப்புடையதாக சொல்லப்படுகிறது. ஆனி […]

`வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் இந்த இரண்டையும் அதிக கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். கல்யாணம் என்பது காலம் காலமாகவே மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்பட்டு வருகிறது. இருவீட்டாருக்கும் பிடிக்க வேண்டும், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பிடிக்க வேண்டும். எல்லாமே கைகூடி வந்தால்தான் அடுத்தகட்டமாக திருமணமே நடக்கும். ஆனால் திருமண வயதில் உள்ள மணமகன்கள் அனைவரும் ஒரு சந்தையில் விற்கப்பட்டால் எப்படி இருக்கும்…? பீகார் […]

வருங்கால வைப்பு நிதி(PF) சந்தாதாரர்கள், இப்போது அவசரகாலங்களில் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம். மேலும் கோரிக்கை 72 மணிநேரத்திற்குள் தீர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார். இது முந்தைய அவசரகால பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ஐந்து மடங்கு அதிகரிப்பு ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், கோரிக்கை செயல்முறையை நெறிப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும், மேற்கொள்ளப்படும் பரந்த சீர்திருத்தங்களின் […]

வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவின் ரயில் பயணம் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புக்களுக்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் […]

பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாகும். ஜூலை 1 முதல் புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. வரி முறையை வலுப்படுத்தவும் மோசடிகளைத் தடுக்கவும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த புதிய விதியின் கீழ், உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், நீங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இதுவரை ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதை விரைவில் பெற வேண்டும். இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைத் தடுக்கும் மற்றும் […]

இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து சேவையில் மின்சார வாகன சேவை முன்னணி வகிக்கிறது. தனி நபர் இருசக்கர வாகனங்கள் முதல் பொதுத்துறை பேருந்துகள் வரை பலவும் எலக்ட்ரிக் மயமாகி விட்டன. இதன் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. இந்நிலையில் பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் மூலம் நாட்டின் […]

அரசின் முறையான அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடங்களாக (prayer halls) மாற்றி பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோடவாசல் பகுதியைச் சேர்ந்த ஆயர் எல். ஜோசப் வில்சன் என்பவர், 2024-ஆம் ஆண்டு, தம்முடைய வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் அந்த வீட்டின் மீது மாவட்ட தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை […]