கேஸ் அடுப்பில் சமைக்கும் போது பால் வழிந்து மற்ற பொருட்கள், எண்ணெய் போன்றவை விழுவது வழக்கம். இது பொதுவாக கேஸ் அடுப்பில் கறைகளை உருவாக்குகிறது. அதை அகற்ற அதிக முயற்சி எடுக்க வேண்டும். இந்த கறைகளால் சிலரது கேஸ் அடுப்புகள் மிகவும் அழுக்காக காட்சியளிக்கும். அதை சுத்தம் செய்ய சில வழிகள் உள்ளன. இதை பின்பற்றினால் நிச்சயம் கேஸ் ஸ்டவ் புத்தம் புதியதாக இருக்கும். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், […]

சீனா மற்றும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இருப்பினும், இவ்வளவு பெரிய சந்தையாக இருந்தபோதிலும், இந்திய குடும்பங்களில் சுமார் 6 சதவீதத்தினர் மட்டுமே உண்மையில் கார் வைத்திருக்கிறார்கள். நைஜீரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. நைஜீரியாவில், சுமார் 18 சதவீத குடும்பங்கள் சொந்த வாகனம் […]

பெங்களூரு வெற்றிக்கொண்டாட்ட நெரிசல் வழக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, […]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,000யை நெருங்கி வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன், தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்க மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, […]

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனென்றால் பாம்புகள் மிகவும் ஆபத்தானவை, அவை கடித்தால் ஒருவரின் மரணம் நிச்சயம். உலகில் ஒரு கிராமம் இருக்கிறது, அங்கு மக்கள் வசதியாக பாம்புகளை வளர்த்து அவற்றுடன் வாழ்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை நாகப்பாம்புகள். இது பாம்புகளின் கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாம்பு கிராமம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பெயர் ஷெட்பால். ஆனால் இங்கே ஏன் இவ்வளவு […]

செயற்கை நுண்ணறிவு (AI) மிக வேகமாக வளர்ந்துவருகிறது, மற்றும் இது மனித வேலைவாய்ப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில், மனிதர்களால் செய்யப்படும் சில வேலைகள் முற்றிலும் AI-ஆல் மாற்றப்படக்கூடிய நிலைக்கு வந்துவிடும். சில முக்கியமான ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவால் (AI) மிகத் தீவிரமாக பாதிக்கப்படக்கூடிய 8 வகையான வேலைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். HR பணிநீக்கம்: இப்போது பல […]

வீடு தோறும் சமையல் அறையில் இருக்கும் முக்கியமான பொருள் வெங்காயம். வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வெங்காயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அந்த வெங்காயத்தில் இருக்கும் சின்னச் சின்ன குறைகள் நம் ஆரோக்கியத்திற்கே வேட்டுவைத்து விடும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெங்காயத்தில் காணப்படும் கருப்புப் புள்ளி மற்றும் கருப்பு கோடுகளால் நமக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். வெங்காயத்தை உரித்து நறுக்கும்போது […]

நன்றியில்லாதவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பை சாடிய எலோன் மஸ்க், “எனது உதவி இல்லையென்றால் 2024 தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்” என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள், தற்போது கடுமையான பொதுவெளி சண்டையாக மாறியுள்ளது. இதன் மையக் காரணமாக, டிரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ள “One Big Beautiful Bill” என்ற வரி […]

BIS சான்றிதழ் இல்லாமல் 11,000க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட காமர்ஸ் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மைன்ட்ரா(Myntra), மீஷோ(Meesho), பிக்பாஸ்கெட் (Bigbasket) நிறுவனங்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளுக்குப் பிறகு, இந்திய தரநிலைகள் பணியகம் அல்லது பிஐஎஸ் இந்த தளங்களில் சான்றிதழ் பெறாத பொருட்கள் விற்கப்படுவதைக் […]

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், ராம தர்பார் (Ram Darbar) உருவங்களின் முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஜூன் 5 அன்று, கங்கா தசமி பண்டிகையை முன்னிட்டு, கோயிலின் முதல் மாடியில் உள்ள ராம தர்பார் மற்றும் ஏழு பிற கோயில்களில் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்மபூமி புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்ட […]