இந்திய அரசால் தமிழ் மொழியை செம்மொழியாய் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 19ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவை பொருத்தமட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இந்த நிலையில்தான் ’தமிழை’ செம்மொழியாக கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மொழியின் பழமை, கிளைமொழிகளின் தாய்மொழி, பிறமொழிகளை சாராது, இலக்கிய இலக்கண வளம் உள்ளிட்ட 11 கோட்பாடுகள் செம்மொழிக்கான தகுதிகளாக […]
சப்த கன்னிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக திகழும் வராஹி அம்மன் சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக போற்றப்படுகிறார். வாழ்வின் பஞ்சங்களைப் போக்கும் வாராஹி அம்மனை சரியான முறையில் விரதமிருந்து வழிபட்டால் பக்தர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் வளங்களை அருளும் சுக்கிரனுடைய அனுகிரகத்தை பெற வேண்டுமெனில், வாராஹி அம்மன் வழிபாட்டை சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளன்று செய்வது நல்லது. சுக்கிரனுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி தாயாருக்கு உகந்த […]
இந்தியாவில் ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், வாழும் உரிமை, குடும்ப வாழ்வு, குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமைகள் LGBTQ+ தம்பதிகளுக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA+ தம்பதிகள் திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததை நீதிபதிகள் GR சுவாமிநியாதன் மற்றும் V லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. இருப்பினும், திருமணம் என்பது ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி […]
என்ன செய்தால் நம்முடைய வீட்டில் விரைய செலவை தடுக்கலாம் என்ன செய்தால் நிதி நெருக்கடி பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்துவதால் தடைகளை ஏற்படுத்தும் எனவே எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று பார்க்கலாம். பழைய சைக்கிள்கள், பழைய டிவி ரேடியோ, […]
பலர் உட்கார்ந்து வேலை செய்யும்போது, படிக்கும்போது அல்லது டிவி பார்க்கும்போது தங்களது கால்களை ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இப்படி கால்களை ஆட்டுவதைப் பார்த்தால் திட்டுவார்கள். உண்மையில், உட்காந்திருக்கும்போது கால்களை ஆட்டுவது ஒரு கெட்ட பழக்கமாக கருதப்படுகிறது. கால்களை ஆட்டுவது ஒரு சாதாரண பழக்கமாக இருக்கலாம். ஆனால், சில சந்தர்ப்பங்களில் இது உடலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா..? உண்மையில், நம்முடைய உடலானது ஒரு எப்போதும் செயல்பாட்டில் […]
தூய்மையான குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளிற்கும் மிகவும் அவசியமானது. இதனால் பலரும் வீட்டிலேயே RO (Reverse Osmosis) அமைத்து நீரை சுத்தம் செய்து குடிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் சுத்தம் செய்யப்பட்ட கேன் தண்ணீர்களை தான் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வசதி இல்லாதவர்கள் சுத்தமான நீரை குடிக்க என்ன வழி? RO அமைப்பு இல்லாமல், தண்ணீரை சுத்தமாக்குவது எப்படி என்று நினைக்கலாம். இயற்கையான மற்றும் அழுத்தமான நவீன […]
பரிசு பொருட்கள் ஒருவரை வாழ்த்துவதற்கு.. அல்லது மகிழ்ச்சியான தருணங்களை மேலும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு, என பல உதாரனத்தோடு நண்பர்களுக்கும், குடும்ப உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால் வாஸ்து சாஸ்த்திரத்தின் படி சில பொருட்களை பரிசாக கொடுக்க கூடாது என்றும் சில வற்றைப் பரிசாகப் பெறக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அப்படி எந்த பொருள் வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்பதை பார்ப்போம். ஒற்றையாக இருக்கும் யானை பொம்மை பரிசாகத் தரக்கூடாது. மாறாக ஜோடியாக […]
நன்றாக சாப்பிட்ட உடன் தூக்கம் வரும் உணர்வை நாம் பலரும் அனுபவித்து இருப்போம். அப்படி உணவு உண்ட பின் உறக்கம் வந்தால், உடனே சென்று படுத்து உறங்கக்கூடாது, அது தவறானது. இதனால் செரிமானத்தில் பாதிப்பு வரும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்டு இருப்போம். அதேபோல் மற்ற சில விஷயங்களையும் நாம் உணவுக்குப் பின் செய்யக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். […]
நாம் தூங்கும்போது வரும் கனவுகள் பெரும்பாலும் நம் நினைவில் இருப்பதில்லை. எனினும், சில நேரங்களில் நமக்கு வரும் கனவுகள் தெளிவாக ஞாபகத்தில் இருக்கும். அப்படி வரும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா? என்று நாம் யோசிப்பதுண்டு. கனவில் சில சமயங்களில் பாம்பு, காகம், கழுகு, யானை போன்ற விலங்குகள் வருவதுண்டு. அப்படி கனவில் விலங்குகளைக் கண்டால், ஜோதிடத்தின்படி அதற்கான பலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். யானை […]
புதிய வாகனம் வாங்கும் அனைவரும் பொதுவாக கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும். இதனை அடுத்து வாகனத்தின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து, அதனை வாகன சக்கரத்தால் நசித்து வாகனம் ஓட்டுவர். இதனால் எவ்வித பயனும் ஏற்படாது. ஒரு எலுமிச்சை தான் வீணாகும். முன்பெல்லாம் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கு கால்நடைகளை பயன்படுத்துவதால் அவற்றின் […]

