வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருந்து, சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு செய்து, படைத்து வணங்க வேண்டும். சிவபெருமானை தரிசித்து முடிந்ததும், வாழை மரத்திற்கு மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பலகாரங்களை வைத்து படைத்து […]
18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற ஆர்சிபி அணி வீரர்களை வாழ்த்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண ஆயிரக்கணக்கில் கட்டுக்கடாங்காமல் ரசிகர்கள் கூடியதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஐபிஎல் தொடங்கி 18 சீசன்கள் முடிந்துவிட்டன. முதல் சீசனிலிருந்தே கோப்பைக்காக போராடி வந்த […]
நமது கைகளிலும் சரி, கால்களிலும் சரி ஆபரணம் அணிவதற்கு என்றே சில வரைமுறைகள் நம் பெரியோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்களும் உள்ளன. கை, கால் இரண்டிலும் உள்ள இரண்டாவது விரலில் தான் ஆபரணம் அணிய வேண்டும் என சொல்லி உள்ளார்கள். கையில் மோதிரம் அணிவதாக இருந்தாலும், காலில் மெட்டி அணிவதாக இருந்தாலும் இரண்டாவது விரலை தான் சொல்லி உள்ளார்கள். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் […]
பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம் இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான். கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல […]
சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது, ஆனால் அதற்காக ஆசைப்படவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஷாக் டார், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய துருக்கி, ஈரான், அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் பயணத்தின் விவரங்களை ஊடகங்களுக்கு வழங்கவும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான மோதலில் அந்தந்த நாடுகளின் தலைமைகள் அளித்த ஆதரவிற்கு […]
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லவே அவதிப்படுகின்றனர். காலை வேளையில் 10 மணி நெருங்கும்போதே வெயிலால் அனத்தல், வியர்த்து ஒழுகுதல் என தொடங்கி விடுகிறது. வெளியே சென்றால்தான் தொல்லை என்று சிலர் வீடுகளிலேயே இருந்தாலும் கூட வெயிலினால் வீடே அனல் பறக்கிறது. மின்விசிறியை போட்டால் கூட அனல்காற்றுதான் வீசுகிறது என பலரும் புலம்புகின்றனர். ஏசி இல்லாத வீடுகளில் வெயிலின் தாக்கத்தை எப்படி […]
சிலர் எந்த பாத்திரத்தில் உணவு பொருட்களை வைத்திருந்தாலும் அதை அப்படியே வைத்து சூடு படுத்துவார்கள். இதனால் பாத்திரங்களின் அடியில் கருகி கறை ஏற்படும். அப்படியே சில சமயங்களில் சமைத்த பிறகு பாத்திரத்தில் அடி பிடித்து விடுவதுண்டு. இவற்றிற்கு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அப்படியே கொதிக்க வைக்க வேண்டும். பிறகு நன்றாக அழுத்தி தேய்த்தால் மறைந்துவிடும். பித்தளை, வெண்கலம் ,செம்பு பாத்திரங்களை எலுமிச்சை சாறுடன் உப்பு […]
”எல்லா குழந்தைகளும் அழகுதான். அவர்களின் பொக்கைவாய்ச் சிரிப்பு, அழுகை, தவழும் முனைப்பு, எழுந்து நிற்கும் ஆர்வம், நடக்கத் துடிக்கும் ஆசை… என, அவர்கள் முதல்முதலாகச் செய்யும் விஷயங்கள் எப்போது தெரியுமா? அந்த ஒவ்வொரு செயலும், பெற்றோர்களுக்கு சொர்க்க சந்தோஷத்தைத் தரும். குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருந்து வெளிவந்ததும், அதைத் தொடும்போதே அழத் தொடங்கிவிடும். இதுவரை தாயின் தொப்புள்கொடி மூலம் சுவாசித்த குழந்தை, தன் நுரையீரல் விரிவடைந்து காற்றைச் சுவாசிக்கும் புதிய […]
எல்பிஜி சிலிண்டர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இதன் விலை ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை புதிய சிலிண்டர் வாங்கும் போதும் அதனை தூக்கி பார்த்து, எடை இருக்கிறதா என்பதை சரி பார்க்கிறோம். ஆனால் யாரும் அதன் காலாவதி தேதியை சரிபார்ப்பது இல்லை. பெரிய விபத்துக்களையும், அசம்பாவிதங்களையும் தடுக்க காலாவதி தேதியை தெரிந்து கொள்வது அவசியம். சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி கண்டுபிடிப்பது […]
இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி வருகிறோம். நம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படி முக்கியமோ அதே போல இன்று மொபைல்களும் முக்கியமாக மாறிவிட்டது. என்னத்தான் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கூட நாம் செல்போனில் தான் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சாப்பிடும் போது கையில் செல்போன், தூங்கும் போது பக்கத்தில் செல்போன், இவ்வளவு ஏன் பாத்ரூம் […]

