திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்யக்கோரிய வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. புதிதாக வெளியாகும் திரைப்படங்களை, ரிலீசான நாளிலேயே சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனம் செய்து வீடியோ போடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்த விமர்சனங்கள், ரசிகர்களை திரையரங்குக்கு வரமுடியாமல் தடுக்கின்றன எனவும், இதில் சிலர் பணம் வாங்கி நல்ல விமர்சனம் செய்கிறார்கள்; சிலர் பணம் தரவில்லையென பொய்யான விமர்சனம் செய்கிறார்கள் எனவும் தயாரிப்பாளர்கள் புகார் […]

சமூக ஊடகங்களில் “கூமாபட்டிக்கு வாங்க” என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்படும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பசுமை மலைக்குன்றுகள், குற்றால வனவாசலின் அருகில் உள்ள மெல்லிய பச்சை தரைகள், பனித்துளிகள் நிறைந்த இயற்கைக் காட்சிகள் இளம் பயணிகளையும் சமூக ஊடக ஆளுமைகளையும் வெகுவாக ஈர்த்துள்ளன. ஆனால், இந்த இடங்கள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்பதால், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை […]

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய வரி விகித மாற்றங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 12% ஜிஎஸ்டி வரி அடுக்கை நீக்குவது அல்லது குறைப்பது தொடர்பான விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி, வருமான வரி மற்றும் சுங்கத் துறைகளின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். […]

தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) பகுப்பாய்வின்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய இளைஞர்களிடையே தற்கொலை தான் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 2020–2022 காலக்கட்டத்தில் மட்டும் தற்கொலைகள் 17.1% இளம் மரணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. இதில் சாலை விபத்துகள் முதல் இடத்தையும் தக்கவைத்துள்ளன. ஆனால், நாட்டின் மொத்த இறப்புகளில் தற்கொலை விகிதம் வெறும் 5% மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளவில், இளைஞர்களின் மரணத்திற்கு மூன்றாவது பொதுவான […]

யுபிஐ (UPI) மூலமாக அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பயனர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை NPCI (National Payments Corporation of India) அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், தவறான அல்லது தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போது, யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து பணம் டெபிட் ஆகியிருந்தால், அதை மீட்டெடுக்க பல […]

இழந்த அழகை திரும்ப பெற, கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்க, செல்வம் பெருக, அண்ணன் தங்கை ஒற்றுமை நீடிக்க தரிசிக்க வேண்டிய ஆலயம் ஒன்று உள்ளது என்றால் அது திருக்கள்வனூர் கள்வ பெருமாள் கோவில்தான். காஞ்சிபுரம் நகரின் புனிதமான பாசுரங்களுக்கு நடுவே, திருக்கள்வனூர் என்றழைக்கப்படும் ஒரு அரிய தலத்தில், கள்வப் பெருமாள் திகழ்கிறார். இது திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 55வது தலம் ஆகும். இது தனிச்சிறப்புடன் காணப்படும் தலம். […]

நாடு முழுவதும் இணையவழி மோசடிகள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பங்குச் சந்தை லாபம், பரிசு வென்றதற்கான செய்தி, வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி OTP கேட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒருவர் மற்றொருவரை அழைக்கும் போது “இணையவழி குற்றவாளிகளிடமிருந்து […]

பலருக்கு இரவில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. இது மிகவும் பொதுவானது. இருப்பினும், சிறுநீர் கழிக்க மீண்டும் மீண்டும் எழுந்திருப்பது சாதாரணமானது அல்ல. மேலும், படுத்துக் கொள்ளும்போது சுவாசிப்பதில் சிரமம், எழுந்தவுடன் அதிக வியர்த்தல், இரவில் சரியாக தூங்காமல் இருப்பது ஆகியவை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறிகளாகும். இது உங்கள் இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரகங்களில் ஏதேனும் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இரவில் மட்டுமே தோன்றும் இந்த அறிகுறிகளை பெரும்பாலான […]

இரத்த வகைகள் என்றாலே நமக்கு A, B, AB, O ஆகியவை மட்டுமே தெரியும். ஆனால் தற்போது உலகெங்கும் பரவியுள்ள மருத்துவ அறிவை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய இரத்த வகையை கண்டறிந்துள்ளனர். அதற்கு “Quaddra Negative (குவாடா நெகட்டிவ்)” எனும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு க்வாடலூப்பைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முந்தைய வழக்கமான இரத்த […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கும் விரைவில் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-ஆலங்காயம் ஊராட்சியில் உள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும். குமாரமங்கலம் பகுதியில் ரூ.6 கோடி […]