திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின் கீழ் மாநகராட்சியில் யாராவது குப்பைகளை தெருக்களில் கொட்டினால் ஆதாரத்தோடு காட்டி கொடுத்துவிட்டு ரூ.200 அன்பளிப்பாக பெறுங்கள் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு […]

விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான காப்பீடு சய்வதற்கு அடுத்தமாதம் 15ம் தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ஒன்றை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள்ளாக ஒட்டு மொத்தமாக சம்பா சாகுபடி செய்து முடிக்கப்படும். நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலமாக இந்த […]

மத்தியபிரதேசத்தில் மஹாகாளீஸ்வர் கோயில்மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான கோயில் அமைக்கப்பட்டுள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கா என்றழைக்கப்படும் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் சுமார் 836 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மஹாகல் லோக் காரிடர் எனவும் அழைக்கப்படுகின்றது. இன்று முதல் மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பூஜை செய்த பின்னர் கார்த்திக் மேளா மைதானத்தில் உரை நிகழ்த்தினார். […]

புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்குவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் சபர்பன் எனப்படும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி , சென்னை கடற்கரை முதல் தாம்பரம் , சென்னை கடற்ரை முதல் வேளச்சேரி , சென்னை கடற்கரை […]

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் சரிவிகித உணவு உட்கொண்டால் தான் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இருப்பினும், உணவை பொருத்தமட்டில் எதை உண்ணலாம் எதை தவிர்க்கவேண்டும் என்ற சந்தேகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது வழக்கம். போதுமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள தவறினால் சிசுவிற்கு பிறவி குறைபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாகும். எடை […]

மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த […]

தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்று 70, 80 களில் புகழப்பட்டவர் ஜெமினி கணேசன். தன்னுடை நடிக்கும் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதில் அனைவரையும் மிஞ்சிய கலைஞர் தான் ஜெமினி கணேசன் அவர்கள். அப்படி அவருக்கும் நடிகை புஷ்பவல்லிக்கும் பிறந்த மகளாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேகா என்கிற பாணு ரேகா கணேசன். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் 15 வயதில் அஞ்சனா சஃபர் என்ற படத்தில் […]

பெங்களூருவில் ஓட்டுனரின் அஜாக்கிரதையால் பேருந்து சக்கரத்தில் மாணவி சிக்கியதை அடுத்து சக மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர். பெங்களூருவில் ஞானபாரதி கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்த வழியாக பேருந்தில் வந்த கல்லூரி மாணவி ஷில்பா(23) கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்து திடீரென இயக்கப்பட்டதால் கீழே விழுந்த அவர் சக்கரத்தில் சிக்கினார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு சக மாணவர்கள் மாணவியை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்றனர். இதனிடையே பேருந்தை […]

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் துணை விரிவுரையாளராவதற்குண்டான தேர்வை எழுதி விரிவுரையாளராகலாம் என சத்தீஸ்கர் உயிர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. போஜோகுமாரி படேல் என்ற 26 வயதே நிரம்பிய பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் துணை விரிவுரையாளருக்கு விண்ணப்பித்திருந்தார். அனைத்து தகுதிகளும் இருந்த நிலையில் பார்வை இல்லாததால் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி நரேந்திகுமார் வியாஸ் என்பவர் விசாரித்தார். பி.எஸ்.சி. எனப்படும் […]

பிக்பாஸில் இந்த சினிமா பிரபலம் இருக்க கூடாது, உடனடியாக அவரை வெளியேற்றுங்கள் என மகளிர் ஆணையத் தலைவி அனுப்பி கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதே போல , இந்தியில் சல்மான் கான் பிக்பாஸ் சீசன் 16ஐ தொகுத்து வழங்குகின்றார். இது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகின்றது. கடந்த வாரம்அக்டோபர் 1ம் தேதி 14 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியுள்ளது. […]