10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்க உள்ளார். இதன் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 88 தொகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள். இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த […]

நகை அடமானத்திற்கான புதிய விதிகள் அடுத்தாண்டு ஜனவரி வரை ஒத்திவைத்து ஆர்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் நம்பி இருப்பது வங்கி நகைக்கடனை மட்டுமே, அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதிதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.  அதாவது, நகைக்கடன் வாங்குபவர் அதை மீட்கும் […]

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மே 30 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. தங்கம் என்றாலே, மக்கள் மத்தியில் ஒருவித மவுசு இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனென்றால், முதலீடு செய்வதற்கும், எதிர்கால தேவைக்காகச் சேமிப்பதற்கும், பரிசு கொடுப்பதற்கு என பல்வேறு காரியங்களுக்கு தங்கம் முக்கிய காரணியாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்திய மக்களின் சேமிப்பில் முதலிடம் வகுப்பது தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் தான். […]

திருமணமான பெண் அரசு பணியாளர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதிகாண் பருவத்திலும் கணக்கில் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பான முக்கிய மாற்றத்தை அரசு இன்று அறிவித்துள்ளது. திருமணமான பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு, இப்போது தகுதிகாண் பருவத்திலும் (Probation Period) சேவைக்காலமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய […]

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் சாரா டெண்டுல்கர், குழந்தையாக இருந்தபோது PCOS நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது PCOSலிருந்து விடுபட்ட சாரா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சாரா ஏழாம் வகுப்பு படித்தபோதே கடுமையான முகப்பருவால் பாதிக்கப்பட்டதாக கூறினார். முகத்தில் அதிக எண்ணெய், முடி வளர்ச்சி, எடை உயர்வு உள்ளிட்ட PCOS அறிகுறிகள், அவரது தன்னம்பிக்கை பெரிதும் பாதித்தன. பல வகையான தோல் சிகிச்சைகள் […]

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, ஒரு பெரிய வணிக மாதிரியும் கூட. ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறும்போது, ​​அந்த அணியின் வீரர்கள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் ரசிகர்களின் மகிழ்ச்சியை விட, அணியின் உரிமையாளர்கள் மிகப்பெரிய நிதி வெற்றியைப் பெறுகிறார்கள். ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்ற பிறகு அணியின் உரிமையாளருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதுதான் கேள்வி. ஐபிஎல் […]

வாழ்க்கையில் பலருக்குப் புதிய கார் வாங்குவது ஒரு பெரிய கனவாகும். அந்த காரை வாங்கிய பிறகு, புதிய காரின் டேஷ்போர்டில் தங்கள் இஷ்ட கடவுளின் படத்தை வைத்திருப்பார்கள். காரில் சரியான இடத்தில் கடவுள் சிலையை வைப்பது நல்ல பலன்களைத் தருவது மட்டுமல்லாமல், பயணத்தின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் தடைகளைத் தடுக்கிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து வழிமுறைகள்: சிலை சிறியதாகவும் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். சிலை வாகனம் […]

சனி தோஷம் நீங்கச் செய்யும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பல தடை, தாமதங்கள், நஷ்டங்கள், நோய் போன்றவற்றை எதிர்கொள்வது வழக்கம். இதற்கான பரிகாரமாக, சில சிறப்புப் புனிதத் தலங்களுக்கு சென்று சனி பகவானை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி நன்மை ஏற்படும் என ஆன்மிக நம்பிக்கை உள்ளது. இந்த நிலையில், சனி தோஷம் நீங்கச் செய்யும் முக்கிய […]

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.  ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு […]

கொச்சி அருகே கண்டெய்னர்களுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கிய விபத்தை கேரள அரசு பேரிடராக அறிவித்தது. கேரள மாநிலத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பிய லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் விபத்துக்குள்ளானது. கடலுக்கு 70 கி.மீ. தொலைவில், பலத்த காற்று காரணமாக கப்பல் கவிழ்ந்ததில், அதிலிருந்த 640 கன்டெய்னர்களும் கடலில் மூழ்கின. இதில் 13 ஆபத்தான சரக்குகள் உள்ளன என்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. விபத்துக்குள்ளான வேளையில் […]