சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் காலமானார். 82 வயதான அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஹரியானாவில் உள்ள குருகிராம் மேதாந்தா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களாகவே அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வந்தது. […]

கொரோனா தொற்று உயர்ந்ததை அடுத்து சீனாவில் மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ளது. சீனாவில் பள்ளிகள் தேர்வு முடிந்தவுடன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. 12 நாளில் 2000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஃபென்யாங் மாநகரில் கொரோனா அதிகரித்ததை அடுத்து அந்நகரில் பல்வேறு பகுதிகளில் கடைகள் , மால்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. மங்கோலியா மாகாணத்திலும் புதிய பயணிகள் யாரும் உள்ளே வரக்கூடாது […]

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த அதிகன மழைக்கு 9 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் கனமழைபெய்து வருகின்றது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 9 பேர் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூன்றாவது நாளாக […]

உக்ரைனில் மீண்டும் போர் தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடந்த பயங்கரமான குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அடுத்தடுத்தடுத்து முக்கிய பகுதிகளில் குண்டுகள் வெடித்ததால் கார்கள் தீப்பிடித்து கொளுந்துவிட்டெரிந்தது. இது குறித்து கீவ் நகரத்தின் மேயர் விட்டாலி க்லிட்ச்கோ குண்டு வெடிப்பு பற்றி தெரிவித்துள்ளார். ’மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பல்வேறு அரசு […]

இனிப்பு புளிப்பு சுவையுடைய செர்ரி பழங்களில் 2ஐ மட்டும் இரவு நேரங்களில் சாப்பிட்டு பாருங்கள் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்களை நீங்களே உணர்வீர்கள்…  செர்ரி பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இரு வகைகளாக மார்க்கட்டில் கிடைக்கிறது .இவை இரு சுவையுள்ள பழங்கள் அனைத்துமே நம் உடலுக்கு நிறைய நன்மைகள் செய்ய கூடியது ,மேலும் இதில் ஊட்டசத்துக்களும் ,தாதுக்களும் நிறைந்துள்ளது . இதில்  நம் இதய துடிப்புக்கு தேவையான பொட்டாசியம் […]

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை மருந்துகளைவிட பல மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. முள் சீத்தாப்பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு […]

தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நீலகிரி, தஞ்சை, திருவாரூர் , நாகப்பட்டினம்  ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.  கோவை , திருப்பூர் […]

அமெரிக்காவின் பிரபல மருத்துவர் கொரோனோ தடுப்பூசியின் பக்க விளைவுகளால் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்தியது தடுப்பூசி தான். தொற்று பரவலை கட்டுபடுத்துவதோடு, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி பேராயுதமாக விளங்கியது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த […]

குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முதல் சூரிய சக்தி கிராமத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். மெக்சானா மாவட்டத்தில் மெதேரா என்ற கிராமம் உள்ளது. 1026-27ல் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னரால் புகழ்பெற்ற சூரிய கோயில் கட்டப்பட்டது. இக்கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சோலார் பேனர்கள் இலவசமாக தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க மோடியின் தொலைநோக்குப் பார்வையின் […]

கோழி வந்ததா முட்டை வந்ததா என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.  ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை வலுத்து வருகிறது.   ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர வலுத்து வருகிறது.   இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார்  மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா அல்லது குரங்கு இப்போது […]