மொபைல் சிம்கார்டு வாங்குவதற்கு போலியான ஆவணங்களை அல்லது போலியான எண் வழங்கினால் உங்களுக்கு அது ஆப்பாக முடியும். இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022ன் புதியதாக தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு கூறியுள்ளது படி போலி ஆவணங்களை வழங்கி இருந்தாலோ , வெரிபிகேசனில் தில்லுமுல்லு செய்திருந்தாலோ ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும். போலியான ஆவணங்களில் புகைப்படங்கள் மாற்றி கொடுத்திருத்தல் , பெயர் மாற்றிக் கொடுத்தல் போன்றவை குற்றங்களாக […]

பங்குச்சந்தை ஏஜென்சி நடத்தி வந்த தொழிலதிபருக்கு 37 லட்சம் இழப்பு ஏற்பட்டதை அடுத்து முதலீடு பணத்தை திருப்பி தரமுடியாததால் அவரை கடத்திச் சென்று கையெழுத்து வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வருபவர் 58 வயதான சீதாராமன். இவரது நண்பர் 50 வயதான நெல்லையப்பன் இவருடன் சேர்ந்து தனியார் பசை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2021ம் […]

அக்டோபர் 1 -2023 முதல் கார்களில் எவைஎல்லாம் அவசியமாக இருக்க வேண்டும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.  மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு முதலில் பாதுகாப்பு அம்சங்கள் தான் முதன்மையானது பின்னர்தான் எந்த மாதிரியான கார், அதன் ரகம் என்ன என்பதை பார்க்க வேண்டும். […]

சென்ட்ரல் , எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.  விழாக்காலங்களில் ரயில்வே நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்க்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 2023 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்கள் வருவதால் நடைமேடைகளில் கூட்டத்தை […]

பீகாரில் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் எம்.டி.யும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் மாணவியிடம் கூறிய கருத்துக்கு பதில் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவி ஒருவர் பேசும் போது இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் கொடுக்க வேண்டும் என அவர் பேசினார். சுகாதாரத்தை பேணிக்காக்கவும் பல கிராம மக்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவது இன்றளவும் கடினமாக இருப்பதால் அந்த பெண் […]

செயலி மூலமாக அறிமுகமான பெண் ஒருவர் திருமணமான இரவே யாருக்கும் தெரியாமல் பணம் , நகைகளை மூட்டைக் கட்டி எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.             சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகேயுள்ள சாணாரப்பட்டி என்னும் இடத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 48). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு  மகன் இருக்கின்றார் . தன்னையும் மகனையும் பார்த்துக் கொள்ள […]

’’இங்க ஒண்ணும் தேறாது, அடுத்த தடவ வயசான ஆளா பாரு’’ என்ற குறுந்தகவலை வைத்து மனைவியின் தில்லுமுல்லை ரகசியமாக கண்டுபிடித்து போலீசில் கூண்டோடு பிடித்துக்கொடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் – கண்ணம்மாள் தம்பதி , இவர்களுக்கு சரவணன் (35) என்ற மகன் இருக்கின்றார். கைத்தறி நெசவாளரான இவருக்கு பெற்றோர்கள் சம்மதப்படி புரோக்கர் ஒருவர் மூலம் தஞ்சாவூரின் அய்யம்பேட்டையைச் சேர்ந்த சரிதா என்ற பெண்ணின் […]

அமெரிக்காவில் ஒருவர் வாங்கிய 200 லாட்டரி சீட்டுகளிலும் ஜாக்பாட் அடித்து ரூ.8 கோடியை வென்றுள்ளார். அமெரிக்காவின் வர்ஜீனா நகரில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியைச் சேர்ந்தவர் அலிகெமி. இவர் வர்ஜீனியாவின் லாட்டரி டிக்கெட்டுக்களை வாங்கினார். 200 லாட்டரிடிக்கெட்டுகளை வாங்க நினைத்த அவர் ஒவ்வொன்றையும் தனது பிறந்த மாதம் மற்றும் தேதி ஆகியவற்றை வைத்து லாட்டரிகளை தேர்வு செய்தார். மேலும் மாதங்களின் எண்களின் கூட்டுத்தொகை பிறந்த மாதமாக வரும். 0-2-6-5 என்ற கலவையை […]

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காதலித்து வந்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் வசித்துவந்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணா யாதவ் (26). மற்றும் நேஹா (21) . பெண்ணின் சொந்த ஊர் பீகார் மாநிலம் என கூறப்படுகின்றது. இளைஞரின் சொந்த ஊர் உத்தரபிரதேசம் . இவர்கள் இருவரும் பல்கரில் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலை இளம்பெண் நேஹா அவ்வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது […]

ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் நேரத்தை தமிழக அரசு வீணக்கின்றது என கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்து துறையில் பணியாற்றியவர் வேணுகோபால்.இவர் கடந்த 1995ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் காட்டி ஓய்வூதியத்தை அவருக்கு போக்குவரத்து துறை வழங்கவில்லை. இதனால் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட தொடங்கி , உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு அந்த உரிமையை பெற்றார். ஆனால் கடந்த 2009ம் […]