இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருவதால் இளைஞர் ஒருவர் காருக்குள் வின்டோ ஏ.சி.யை பொருத்தியது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது. வட இந்தியாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது காரில் வீட்டுக்கு பொருத்தக்கூடிய வின்டோ ஏ.சி.யை பொருத்தி உள்ளார்.இந்த ஆண்டு அதிகபட்சமாக 45 டிகிரி வரை வெயில் வெளுத்து வாங்கியது. டாடா வெளியிட்ட புது வகையான பன்ச் காரில்தான் இந்த நபர் தனது புதிய கண்டுபிடிப்பை பொருத்தி வெற்றிகரமாக சோதனையும் […]

சண்டிகரில் கல்லூரி மாணவிகளின் ’ஆபாச வீடியோ’ வெளியான விவகாரத்தில் பஞ்சாப் போலீசார் இதுவரை இரண்டு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் மாணவி ஒருவர் சக மாணவிகள் குளிப்பதை  ஆபசமாக வீடியோ எடுத்து வெளியிட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட மாணவியை போலீசார் விசாரித்தனர். அப்போது மாணவி அவருடைய ஆண் நண்பருக்கு வீடியோக்களை அனுப்பினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷிம்ளாவின் ரோஹ்ரு பகுதியைச் […]

தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது இதனால்அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தைவானின் யூஜிங்கிற்கு கிழக்கே 7.2 என்ற அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் தலைமட்டமானது. இந்திய நேரப்படி மதியம் 2.44 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர் பல இடங்களில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் […]

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மியான்மரில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டை கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு மக்கள் வதைக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஏராளமான இந்தியர்களும் வதைக்கப்படுவதாக மியான்மரில் வசிக்கும் இந்தியர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. […]

மதுரை தொழிலதிபரின் வீட்டில் 95 சவரன் நகை மற்றும் 45 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் . இவர் வீட்டிலில்லாத போது ஜன்னலை உடைத்து உள்ளே வந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து 95 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் 45 கிலோ வெள்ளியையும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் […]

அரசு கஜானா கொள்ளையடிக்கப்படுவதாக கேரள ஆளுநர் புகார் எழுப்பும் நிலையில் நாளை இதற்கான ஆவணங்கள் வெளியிடப்படும என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்… கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் மலையாளம் துறை இணை பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரியா வர்கீஸ் என்பவரும் உள்ளார். அவர் முதல்வர் பினராயி விஜயனின் தனி செயலாளர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி. தேர்வு நடந்தபோது பிரியா வர்கீஸ் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்துள்ளது. இருப்பினும் தரவரிசைப் பட்டியலில் அவர் […]

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர அவர்களுக்கு மருத்துவ சீட்டு வழங்கப்பட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்….’’ வெளியுறவு கொள்கை தொடர்பான மக்களவை குழு , இவர்களுக்கு இந்தியாவில் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என பரிந்துரைத்திருந்த நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது… அரசு […]

மதுரையில் வரும் 2024ம் ஆண்டுக்குள் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் இது உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. அனைவரும் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதற்காக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, […]

திண்டுக்கல் அருகே பட்டியலினத்தவருக்கு  வாடகைக்கு வீடு கிடையாது என்ற வீட்டு உரிமையாளர் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நாயக்கனூர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடி ஒருவர் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு வீட்டு வாசலில் நின்று வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். வீட்டு உரிமையாளரான மூதாட்டி அவரிடம் நீங்கள் என்ன சாதி, ? எனக் கேட்டுள்ளார். நான் என்ன சாதி என கேட்கின்றேன் என நீங்கள் தவறாக […]

ஒசூரில் செயல்பட்டு வரும் ஏகே ஸ்டாக் நிறுவனத்தில் பிட்காயின் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒசூரின் பிரதான பகுதியில் ஏ.கே.ஸ்டாக் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அருண்குமார் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதில் பிட்காயினில் முதலீடு செய்வதால் விரைவில் பணம் இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படும் எனக்கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. போச்சம்பள்ளியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் லட்சக்கணக்கில் […]