தமிழக்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து வாரந்தோறும் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அக்டோபர் மாதத்தில் இருந்து வாரம் தோறும்  புதன் கிழமைகளில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , ’’ அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவே மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் […]

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரி வீட்டுக்குள் புகுந்த மர்ம  நபர் 50 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றான். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய அசோகன் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் கைகா அணுமின்நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று 1ம் தேதி கர்நாடகம் சென்றுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். கூடங்குளத்தில் […]

சேலத்தில் இருந்து சென்னை புறப்படவிருந்த பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த போது   எதிரே வந்த டிப்பர் லாரி அதி பயங்கரமாக மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையத்தைச் சேரந்த திருநாவுக்கரசு (65) , ரவிக்குமார் (41) , செந்தில் வேலன் (40 ) , சுப்பிரமணி (40) உள்பட 7 பேர் சென்னை சென்றுகொண்டிருந்தனர். இவர்களின் உறவினர் சென்னையில் இருக்கின்றார். அவர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா […]

கர்நாடக  மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா , அவருடைய மகன் , எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா வக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு வளர்ச்சி ஆணையம் குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கினார். இதற்காக எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர் புகார் […]