உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது கள்ள உறவுக்குத் தடையாக இருந்த மகனை, தந்தையே சதி செய்து கொலை செய்துவிட்டு, மகனை மிருகம் தாக்கியதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சௌரப் (30) என்ற இளைஞர் அவரது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சௌரப்பின் உடல் கரும்புத் தோட்டத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. சௌரப்பின் தந்தை சுபாஷ் (60), தனது மகனை காட்டு மிருகம் தாக்கியதால்தான் இறந்துவிட்டான் என்று காவல்துறையினரிடம் […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயல்வெளியில் ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இது பாலியல் வன்கொடுமைக்கு பிறகு நடந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை விசாரணையில் இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியது, ஒரு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் என்பது அம்பலமாகியுள்ளது. உயிரிழந்தவர் மஹோபா மாவட்டத்தின் கப்ராய் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த […]

கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் விசாரித்து வருகின்றனர். கரூர் தாந்தோணிமலையில் […]

இந்தியாவில் திருமணம் என்றாலே, அது ‘செலவு’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ஆடம்பரமான ஏற்பாடுகள், பல்வேறு சடங்குகள் மற்றும் பல நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டங்கள் காரணமாக, திருமணங்களுக்கான செலவு இன்று லட்சங்களில் ஆகிறது. இந்த அதிகரித்த நிதிச் சுமையின் காரணமாக, பலர் திருமணங்களை எளிமையாக நடத்தத் தயங்குவதாகவும் அல்லது விரும்பாததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய விலை உயர்ந்த திருமணங்களில், எதிர்பாராத ஒரு சிறிய இடையூறு கூட ஒட்டுமொத்த […]

இந்திய சாலைகளில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு கடுமையான நிதிச் சுமையை அறிமுகப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், இனிமேல் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய அறிவிக்கையின்படி, பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் செலவு, பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அமைச்சகம் வாகனங்களின் வயதின் அடிப்படையில் கட்டணப் பிரிவுகளைத் […]

சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டை தலைகீழாக மாற்றும் வகையில், இந்தியாவில் தக்காளி விலை கடந்த சில வாரங்களில் திடீரென உச்சத்தை அடைந்துள்ளது. அக்டோபர் மாதம் பெய்த மிக கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதமே, இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அரசு புள்ளி விவரங்களின்படி, நாட்டின் சில்லறை சந்தையில் கடந்த 10 முதல் 15 நாட்களுக்குள் மட்டும் தக்காளி விலை சுமார் 50% வரை அதிகரித்துள்ளது. அக்டோபர் 19 […]

நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத இரண்டு பொதுவான பொருட்களான சர்க்கரை மற்றும் உப்பு (சோடியம்) ஆகிய இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. இவை இரண்டில் எது அதிக தீங்கு விளைவிக்கிறது என்ற குழப்பம் பலரிடமும் நீடிக்கிறது. சர்க்கரை மற்றும் உப்பு இரண்டும் வெவ்வேறு வழிகளில் இதயத்தைப் பாதிப்பதால், இதற்கு எளிமையான பதிலைக் கூற முடியாது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் விளைவுகளைப் […]

தமிழ்நாட்டில் இன்னும் 5 மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக, விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்து வரும் நிலையில், நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் குறித்து கருத்து தெரிவித்த அவர், பாஜகவை ஆதரிக்கும் அல்லது அந்த கூட்டணியில் இருக்கும் […]

திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 56) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (55) ஆகியோர், சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையே, சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்தத் தொடர்பை பற்றி அறிந்த கணவர் ராஜா, தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதன் காரணமாக, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு, குடும்பத்தில் […]

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மீண்டும் எப்போது பிரச்சாரம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரூரில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் காரணமாக பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில், கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சோக நிகழ்வு, […]