சென்னை மதுரவாயல் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் திரிபுராவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரின் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, ரேபிடோ (Rapido) ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், கைது செய்யப்பட்ட ஓட்டுநர் அளித்த வாக்குமூலம், இச்சம்பவத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், அந்த இளம்பெண் தனது பயணத்திற்காக ரேபிடோ சேவையை நாடியுள்ளார். அவர் முதலில் பள்ளிக்கரணைக்குச் […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர், கடந்த 16-ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, ஒரு இளம்பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, 6.5 சவரன் நகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்துறை பகுதியில் முதியவருடன் பேச்சு கொடுத்த அந்த இளம்பெண், தன்னைத் திட்டக்குடியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னைத் திட்டக்குடி எல்லையில் கொண்டுபோய் விடுமாறு கோரியுள்ளார். […]
டெல்லி மாநிலம் திமர்பூரில் உள்ள காந்தி விஹார் பகுதியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படித்து வந்த 32 வயது இளைஞர் ஒருவர், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் ராம் கேஷ் மீனா என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் இதைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பாகவே காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால், ராம்கேஷ் மீனாவின் பெற்றோர் […]
வீட்டில் மிச்சமாகும் இனிப்புகளின் சுவை மற்றும் புத்துணர்ச்சி மாறாமல் பாதுகாக்க, அவற்றைச் சமையலறையில் சேமிக்கும்போது சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம். பலரும் இனிப்புகளை அவை விற்கப்பட்ட அசல் பெட்டிகளுடனேயே நேரடியாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால், அவற்றின் சுவையும் தரமும் கெட்டுப்போகின்றன. இனிப்புகளைச் சரியாகச் சேமிப்பதற்கான எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகளை இங்கே காணலாம். சந்தையில் வாங்கும் இனிப்புப் பெட்டிகள் பொதுவாக முழுமையாக காற்றுப் புகாதவை அல்ல. எனவே, […]
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் ஜிம் செல்வதையே தீர்வாக கருதுகின்றனர். ஆனால், நம் சமையலறையில் தொடங்கும் சிறிய உணவு மாற்றங்களே பெரிய பலன்களைத் தரும் என்கிறார் உதிதா அகர்வால். இவர் ஜிம் செல்லாமலேயே 8 மாதங்களில் சுமார் 30 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ளார். இவரது கூற்றுப்படி, பதப்படுத்தப்படாத முழு உணவுகளான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளில் கவனம் செலுத்துவதே எடை இழப்புக்கு முக்கியம். […]
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது சற்றுக் குறையத் தொடங்கியிருப்பது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சிக்குச் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் முக்கியப் பொருளாதாரக் காரணிகளே பின்னணியாக உள்ளன என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் மீதான ஆர்வம் குறைந்ததே இந்த விலை சரிவுக்கு முதன்மைக் காரணமாகும். […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லால்புரம் மணலூர் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 22). இவரும், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 25 வயது பட்டதாரிப் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மகேஷ் அப்பெண்ணிடம் உன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பட்டதாரிப் பெண்ணை அவர் தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் தொடர்ந்து நெருக்கமாகப் பழகி உல்லாசம் அனுபவித்து […]
உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் அமேசான், தற்போது சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி, ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செலவுகளைக் குறைக்கும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் பணிநீக்க நடவடிக்கை இன்று முதல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவைகளை வழங்கி வரும் […]
வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்ய தாக்கரே ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், இந்தப் பிழைகளை தேர்தல் ஆணையம் சரி செய்ய தவறினால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிப்பதா வேண்டாமா என்று எதிர்க்கட்சிகள் இணைந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார். “மும்பையை விழுங்க வரும் அனகோண்டா”..!! யாரையும் நேரடியாக குறிப்பிடாமல், […]
கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) மற்றும் பி.யூ.சி. (PUC) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மாநில அரசு மாணவர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதத்தை குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியிருந்தது. தற்போது, இந்த சதவீதம் 33% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்ச்சி விதிமுறைகள் என்ன..? இந்தக் குறைக்கப்பட்ட சதவீதத்தின்படி, இனி […]

