கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிவிட்டதாக தகவல் ஒன்று பரவியது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், காவல்துறையினருக்கே அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது. கத்தியால் குத்தப்பட்ட அந்தப் பெண்ணின் 14 வயது மகனே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 9ஆம் வகுப்பு படித்து வரும் அந்தச் […]
திருச்சி மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான திருப்பட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் அற்புதத் தலமாகப் போற்றப்படுகிறது. பழங்காலத்தில் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலம், ஒரு தேவார வைப்புத் தலமாகவும் திகழ்கிறது. இக்கோயில் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் […]
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் தனிச்சிறப்புப் பெறுவது கந்த சஷ்டி விரதம். மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதிகள் வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே ‘கந்த சஷ்டி’ அல்லது ‘மகா சஷ்டி’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த மகா சஷ்டியின்போது பக்தர்கள் முருகனை வேண்டி சிறப்பு விரதம் மேற்கொள்வது வழக்கம். ஐப்பசி மாதத்தில் தான் முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து தேவர்களைக் காத்தருளினார். அதன் அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை பிரதமை […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகே ஆனேக்கல் தாலுகா, ஜிகினி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்த இளம் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் பாத்ரா (23) மற்றும் சீமா நாயக் (21) என்ற இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது, பழக்கம் ஏற்பட்டு, தங்களது உறவினர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல […]
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சிமெண்ட் தொழிற்சாலை நடத்தி வந்த தொழிலதிபர் மஹானா என்பவருக்கும், டெல்லியை சேர்ந்த 25 வயதான நிகிதாவுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, மஹானா லக்னோவில் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானார். இதன் காரணமாக, அவர் தனது மனைவி நிகிதாவிடம் ரூ.15 லட்சம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மஹானாவின் தாயாரும் வரதட்சணை கேட்டு […]
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான அகில் அக்தரின் மர்ம மரணம், மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் அகில் பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருப்பது, இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகவும், மேலும் தனது தாயும் சகோதரியும் தன்னைக் கொலை செய்ய சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ வாக்குமூலத்தின் […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பழங்குடியினப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மா (45) என்ற பழங்குடியினப் பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரைத் தேடி பல இடங்களில் அலைந்தும் கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், காணாமல் போன வள்ளியம்மாவுக்கும், அதே […]
சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பொக்கிஷமாக விளங்கும் நெய், உள் உறுப்புகளுக்கு மட்டுமின்றி, சரும பராமரிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் எடை குறைவதுடன், உடலில் உள்ள நச்சுகள் நீங்கும். மேலும், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைத்து, நாள் முழுவதும் ஆற்றலை வழங்குகிறது. இது ஒருபுறம் இருக்க, நெய்யை சமையலைத் தாண்டி […]
மழைக்காலம் தீவிரமடையும் காலகட்டத்தில், இடி மற்றும் மின்னல் தாக்குதல்களால் இந்தியாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். மின்னல் எப்போது, எங்கே, எப்படி தாக்கும் என்பதைக் கணிக்க இயலாவிட்டாலும், வானிலை முன்னறிவிப்புகளைக் கவனிப்பதன் மூலம் உங்கள் பகுதியில் ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளலாம். திறந்த வெளியில் சிக்கிக் கொண்டால் : திறந்தவெளிகளில் தனியாக இருந்தால், உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படி செல்ல முடியாத சூழலில், உங்கள் […]
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு விலகியதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த சமீபத்திய தகவல்படி, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை இன்றிரவு (அக். 22) ஒருநாள் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, காவிரி படுகை மாவட்டங்களில் மழைப்பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், வட […]

