சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு, அவரது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்த சாந்தி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வேலூரில் வசித்து வந்தார். இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு சாந்தியின் முதல் கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவரைக் கவனித்துக் கொள்வதற்காகச் சாந்தி தனது மகளை அவரது அத்தை வீட்டில் விட்டுச் சென்றார். […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (24) என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஆர்த்தியின் தந்தை மற்றும் சகோதரர்கள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி, ஆர்த்தி மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால் கறக்கும் தொழில் செய்து வந்த ராமச்சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை ஆர்த்தியின் குடும்பத்தினர் […]

சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் தங்க நகைக்கடனின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில், ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ. 6,000-இல் இருந்து ரூ. 7,000 ஆக உயர்த்தி வழங்க கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தேசிய அளவிலான வர்த்தக […]

உலக வேலைவாய்ப்பு சந்தை தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டிஜிட்டல் யுகத்தால் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. நிறுவனங்கள் AI கருவிகள் மற்றும் ஆட்டோமேஷன் முறைகளைத் தீவிரமாக ஏற்றுக்கொள்வதன் விளைவாக, சந்தையில் புதிய திறன்களுக்கும், தொழில்முறை மறுவரையறைக்கும் தேவை அதிகரித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 90 மில்லியன் (9 கோடி) வேலைகள் அழியும் அபாயம் உள்ளதாகவும், […]

நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் மெய்நிகர் அமர்வில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் வீடியோ மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, வழக்கறிஞர்களின் ஒழுக்கம் மற்றும் தொழில்முறைக் கண்ணியம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆன்லைன் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு சற்று முன்னதாகப் […]

திருச்சியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து, திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் 2011-ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அந்தப் […]

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், நிதிப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகவும், திறமையாகவும் மேற்கொள்ளும் வகையில், பிஹிம் (BHIM) செயலியில் பல புதிய வசதிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனையின் வருகைக்குப் பிறகு, பலரும் ரொக்கப் பணத்தைக் கையாள்வதைக் குறைத்துவிட்டனர். […]

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தமிழக அரசியல் களம் அவரைச் சுற்றியே சுழலத் தொடங்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அடுத்தடுத்து மாநாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, சில நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டாலும், கட்சி மீதான மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்ற […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு (வயது 100), மீண்டும் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் தான் அவர் வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால், நல்லகண்ணு முதலில் சென்னையில் உள்ள […]

பிரபல சமையல் கலைஞர் மற்றும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா எழுப்பியுள்ள திருமண மற்றும் கர்ப்பம் தொடர்பான சர்ச்சைக்கு, நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் சட்டத்தை மட்டுமே நம்புவதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல்வேறு பிரபலங்களின் சுபநிகழ்ச்சிகளில் […]