அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த தொடர் விலை உயர்வு, நடுத்தர மக்களைத் தங்கம் வாங்குவது குறித்து யோசிக்க வைத்திருக்கும் நிலையில், எப்போதுதான் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் குறித்து பேசிய பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை குறைய ஒரே ஒரு வாய்ப்பு […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக யார் இணைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான பெண்கள் காத்திருக்கின்றனர். தகுதியான பயனாளிகள் நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம் என்ற காலக்கெடு உள்ள நிலையில், விண்ணப்பித்தவர்களும், விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு : மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். இதில் உள்ள தகவல்களில் […]

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு (விஷ்ணுவுக்கு) உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும், குறிப்பாக மூன்றாவது சனிக்கிழமை, பெருமாளை வீட்டிற்கு அழைத்து சிறப்பு வழிபாடுகள் செய்வது பலரின் வழக்கம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில் சனி மகா பிரதோஷம் இணைவது கூடுதல் சிறப்பம்சமாகும். பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய வழிபாட்டுக் காலமாகும். எனவே, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் சனி மகா பிரதோஷம் இணைந்து வரும் […]

தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட முதல் கோயில் என்ற வரலாற்று சிறப்பைப் பெற்றது கூத்தனூர் சரஸ்வதி கோயில். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலும் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் தான் இந்த பிரசித்தி பெற்ற ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முதன்மை தெய்வமாக, வெள்ளைத் தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில், வெண்ணிற ஆடை அணிந்து தேவி அருள்பாலிக்கிறார். அன்னையின் வலது கீழ்க் கையில் […]

சென்னை – மதுரை இடையே தினமும் நடைபெறும் விமானப் போக்குவரத்து சேவையில், நேற்று மதியம் ஏற்பட்ட ஓர் எதிர்பாராத நிகழ்வு, பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து சரியாக பகல் 12.40 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விமானம் மதுரை விமான நிலையத்தை நெருங்கி, பகல் 1.45 மணியளவில் தரையிறங்க ஆயத்தமானது. ஓடுபாதையில் […]

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. விமான நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தின் குப்பைத் தொட்டிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், இயக்குநருக்கு தகவல் அளிக்க, நள்ளிரவில் விமான நிலைய அவசரகால பாதுகாப்பு குழுவின் கூட்டம் நடந்தது. பின்னர் உயர் அதிகாரிகள், பிசிஏஎஸ், […]

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெரியண்ண உடையாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், கால்நடைகளை மேய்க்கச் சென்ற ஒருவர், ஓரிடத்தில் மண் மேடு இருப்பதையும், நாய்கள் அங்கு துணியை இழுப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அதன் அருகே சென்று பார்த்தபோது, புதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், மண்ணைத் தோண்டி […]

ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கார்க் பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. பல இடங்களில் மணப்பெண் தேடி வந்த நிலையில், ஜிதேந்திரா என்பவர் அந்த இளைஞரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தன்னை திருமண புரோக்கர் என்று அறிமுகம் கொண்டார். மேலும், ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்ளதாகவும், அவரை இளைஞருக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் உறுதியளித்ததால், இளைஞரின் வீட்டாரும் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் சம்மதம் தெரிவித்தனர். […]

திருநெல்வேலியைச் சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் பெங்களூரு, கே.பி. அக்ராகரம் பகுதியில் ஒரு மிச்சர் கம்பெனி நடத்தி வந்தார். அதே கம்பெனியில் மாஸ்டராகப் பணிபுரிந்த கே.பி. அக்ரகாரத்தைச் சேர்ந்த பவன்குமார் (19) என்பவருக்கும், உரிமையாளர் அல்போன்ஸின் மனைவி சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் 4 மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸுக்குத் தெரிய வந்ததையடுத்து, பவன்குமார் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். அதன் பிறகு, அவர் திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு, […]

ரயில்களில் செல்லும்போது மலைகள், பசுமையான வயல்கள் என அழகான காட்சிகளை ரசித்தவாறே ரயிலில் பயணம் மேற்கொள்வது பலருக்கும் பிடிக்கும். நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான தேநீர், காஃபி, உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரயில் நிலையங்களில் எளிதில் கிடைக்கின்றன. ஆனால், மக்கள் கூடும் பெரிய ரயில் நிலையங்களில் கூட, அவசரத் தேவைக்கான ஒரு மருந்துக் கடை கூட […]