நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இன்றி எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. வங்கிகளில் கணக்கு தொடங்குவது, சிம் கார்டு வாங்குவது, அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியமாகிறது. இந்நிலையில், ஆதார் கார்டு தொலைந்துவிட்டால், அதை எப்படி ஆன்லைன் மூலம் […]

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை ஆன்லைன் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும், புதிய ரேஷன் கார்டு கோரியும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எனவே, ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகள் மூலமே பெண்களுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் […]

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா கக்கர். இவர், இந்தி டிவி நாடகங்களில் நடித்து பிரபலமானவர். அதேபோல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் மிக பிரபலமான நடிகையாக தீபிகா கக்கர் வலம் வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டில் ‘நீர் பரே தேரே நைனா தேவி’ என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர், 2011 […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் மே 18ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. 5 வயது சிறுமி கோவிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரை, பக்கத்து வீட்டுக்காரரான பவித்ரா என்பவர் கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பத்தின் வீடியோ சமூக […]

பாலியல் உறவுக்கு அழைத்தபோது வர மறுத்ததால், இளைஞரை திருநங்கை ஒருவர் அடித்தே கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா (வயது 45). இவர், வீட்டை விட்டு வெளியேறி, புது வண்ணாரப்பேட்டையில் உள்ள நடைபாதையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர், அப்பகுதியில் சடலமாக இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் […]

இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், ஒரு சிலர் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரிலோ அல்லது நிலம் வாங்கியோ முழு நேரம் விவசாயம் செய்து வருமானம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது காமினி சிங் என்ற பெண் விவசாயியை பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், விவசாய விஞ்ஞானி அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக […]

சென்னை மறைமலைநகரில் கொரோனா தொற்று பாதிப்பால் 60 வயது முதியவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் […]

சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு, நம் உடலில் உள்ள ரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இருக்காது. பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும்போது ஒன்று செயலிழந்தாலும், மற்றொன்றை பயன்படுத்தலாம். ஆனால், சிறுநீரகங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாத நிலையைக் சிறுநீரக செயலிழப்பு என்று சொல்லப்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் மற்றும் பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தக் […]

கோடை காலத்தில் பல வீடுகளில் எலுமிச்சை பழம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஜூஸ் முதல் ஊறுகாய் போடுவது வரை பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், தற்போது பலரும் தங்கள் வீடுகளில் தோட்டம் அமைத்து வரும் நிலையில், அதில் நிச்சயம் எழுமிச்சை மரமும் இடம்பெற்றுள்ளது. எலுமிச்சையை கடைகளில் வாங்குவதை தவிர்த்துவிட்டு, வீட்டு தோட்டங்களிலேயே எலுமிச்சையை வளர்த்து வருகின்றனர். இந்த பருவத்தில் கூட நீங்கள் ஒரு எலுமிச்சை மரத்தை நடலாம். இருப்பினும், மே […]

ஆண் – பெண் விருப்ப உறவுக்கு பிறகு, பிரிந்துவிட்டால் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயது இளைஞர். இவர், ஒரு பெண்ணுடன் ஒரு வருடமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தையும் உள்ளது. இதற்கிடையே, இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ஒரு […]