காலையில் எழுந்தவுடன் காஃபி குடிப்பதோ அல்லது பழங்களை சாப்பிடுவதோ பலரின் பழக்கமாக உள்ளது. ஆனால், ஒரு சில உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அது செரிமான அமைப்பைச் சேதப்படுத்தும் என்றும், அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெறும் வயிற்றில் ஒருபோதும் சாப்பிடக்கூடாத 8 முக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள் குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வெறும் வயிற்றில் […]
இந்தியாவில் கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை மிகவும் பிரபலமான அசைவ உணவுகளாக உள்ளன. இந்த இரண்டில் எது உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கலாம். ஊட்டச்சத்து மதிப்பு, செரிமானம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து நிபுணர்களின் கருத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சியின் பலன்கள் : கோழி இறைச்சியில் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் மீனாட்சி (28). இவர் சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது காதலனால் ஏமாற்றப்பட்டு, அவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்ய முயன்றதால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, மீனாட்சி தனது சகோதரி வசிக்கும் சிவகங்கை மாவட்டம் […]
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் புதிய வியூகங்களுடன் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. 2021 தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அ.தி.மு.கவும், ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் தங்கள் கட்சிக்குள் கொண்டு வரும் வேலையைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. […]
தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற சகாப்தமாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாங் ஐலாந்து கடற்கரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு விசித்திரமான விலங்கின் உடல் ஒதுங்கியது. இதற்கு “மான்டாக் மான்ஸ்டர்” என்று பெயரிடப்பட்டது. இந்த விலங்கின் தோற்றம் மிகவும் வினோதமாக இருந்ததால், இது ஏதோ அரசு ஆய்வகத்தில் இருந்து தப்பி வந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினமாக இருக்கலாம் அல்லது இதுவரை யாரும் பார்த்திராத புதிய விலங்காக இருக்கலாம் எனப் பலவிதமான வதந்திகளும் கற்பனைகளும் […]
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத் (45). இவருக்கு மனைவியுடன் 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் தாயார் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான மஞ்சுநாத், அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக மஞ்சுநாத் தனது மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்துள்ளார். பின்னர், மீண்டும் பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, […]
உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், அத்தைக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட காதல், இறுதியில் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த விநோதச் சம்பவம் இரு குடும்பங்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையின் சமரச முயற்சியால் இறுதியில் திருமணம் அரங்கேறியது. ஜகன்னாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (24) என்ற இளைஞர் கூலி வேலை செய்து வருகிறார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தனது தாய்வழிப் […]
கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பஞ்சாபி பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரூபிந்தர் கவுர் என்ற பெண்ணிடமிருந்து பஞ்சாப் காவல்துறையினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தனது கணவர் குர்விந்தர் சிங், தங்கள் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், […]
தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் ‘மிர்ச்சி’ மாதவி, சினிமா துறையில் தான் சந்தித்த மோசமான ‘காஸ்டிங் கவுச்’ அனுபவங்கள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். பிரபாஸின் ‘மிர்ச்சி’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மாதவி, ஒருமுறை தனக்கு வந்த அதிர்ச்சியூட்டும் அழைப்பு பற்றிப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “ஒரு நபர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘பிரகாஷ் ராஜுக்கு மனைவியாக நடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. […]

