இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு , புதுச்சேரியில் நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று 12 மாநிலங்களுக்கான இரண்டாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. பாஜகவை பொறுத்த வரை மக்கள் தலைவர்கள், திரை பிரபலங்கள் என புத்தம் புது வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தமிழிசை சௌந்தரராஜன் கூட, தனது ஆளுனர் பதவியை […]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இனி 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால், அவரோடு இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி கூறியுள்ளார். மேலும், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் டிடிவி தினகரனும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என தெரிவித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேனி மக்களவை உறுப்பினர் ஆனார் ஓ.பி.ரவீந்திரநாத். ஆனால், வரும் […]

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதை துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா சூசகமாக தெரிவித்துள்ளார். சிறையில் இருந்தபடியே, முதல்வர் பணியை அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, சிறையில் இருந்து அரசு இயங்காது என உறுதியளிக்கிறேன் என்று பதிலளித்தார். அதாவது, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வாய்ப்பு இருப்பதை அவர் சூசகமாக தெரிவித்தார். கடந்த 21ஆம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், […]

மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் பெண் குழந்தைகளுக்கு பலனளிக்கும் சூப்பர் திட்டம் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு பெண் குழந்தைக்கு சாவித்திரிபாய் ஜோதிராவ் புலே பெல்லோஷிப் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 5 ஆண்டுகளுக்கு பெண் குழந்தைக்கு இலவசமாக மத்திய அரசு […]

“வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” என்று சின்னத்திரை நடிகை ஆர்த்திகா கூறியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆர்த்திகா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவர் நடிப்புத் துறையில் வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அதிரடியாக பதில் சொல்லி இருக்கிறார். “வாய்ப்பும், பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்மெண்ட் செய்ய வேண்டிய […]

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் இதற்காக பல புதிய முயற்சிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், ”தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல மாற்றங்கள் […]

நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை நேற்று அறிவிக்கும்போது திடீரென ”ரத்தக் கொதிப்பு” பாடல் ஒலித்ததால் சீமான் கோபமடைந்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார். ஆனால், அந்த சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி […]

சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்க கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்படுகிறது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் ரூ.45 […]

சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ் இன்று சீரியல் நடிகை ஹரிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நடிகை ஹரிகா சன் டிவியில் ஒளிபரப்பாகிய திருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர்தான். ஹரிகா மற்றும் அரவிஷ் திருமணம் பெரியோர்களின் ஆசிர்வாதத்தோடு இரு வீட்டார் சம்மதத்தோடு நடைபெற்றிருந்த நிலையில், இவர்களுக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சின்னத்திரையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. […]