2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் பிறகு, காண்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30, வரை, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் […]

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைப்பெற்றது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், நடைபெற்ற பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு […]

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைப்பெற்றது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், நடைபெற்ற பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு […]

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்று 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 135 தொகுதிகள் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் அங்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவிவருகிறது. கடந்த14-ம் தேதி பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய […]

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற […]

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. நடிகர் மயில்சாமி தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு நான் அவனில்லை, நான் அவனில்லை2 மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார். 1984 முதல் சினிமாவில் நடித்து வந்த இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில் […]

உலகளவில் அதிகமானோரால் பார்க்கப்படும் ஓடிடி தளங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரும் ஒன்று. புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்தையும் இதில் காணலாம். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாட்ஸ்டாரில் இன்று ஒளிபரப்பட்டு வந்தது, அப்போது திடிரென்று ஹாட்ஸ்டார் சேவை டிவி, போன்,லேப்ப்டாப் உள்ளிட்ட அனைத்திலும் முடங்கியதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். […]

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் பிரதானமானதாக இருக்கின்றன. இவற்றுள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை (cervical cancer) ஏற்படுத்தும் Human papillomavirus-க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை வெளிநாடுகளிலிருந்து பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் அதன் உற்பத்தியை இந்தியாவிலேயே தொடங்கியிருக்கிறது கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனம். இந்நிலையில் சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி, செர்வாவாக்(HPV), இரண்டு டோஸ் ரூ.2,000-க்கு, […]

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. ஒரு நிமிடம் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி, வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. 10 மாகாணங்களில் ஏற்பட்ட இந்த அதிதீவிர நிலநடுக்கத்தால் 1,200க்கும் மேற்பட்டோர் பலி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. […]

டைட்டானிக் கப்பலில் இறுதியாக லியானார்டோ டிகாப்ரியோ(ஜாக்) உயிர் பிழக்கை ஒரு வழி இருந்ததாக தனது அறிவியல் ஆய்வு மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார். 1912ம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் ‘டைட்டானிக்’ என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில், 1500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த விபத்து […]