சென்னையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தாமதம் நிலவுவதாகவும் விரைவில் மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது “அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அதற்குரிய விவரங்களை நிதித்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் […]

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலி பணியிடங்களை நிரப்புவது, நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது ஆகிய 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 12-ம் தேதி […]

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் விளையாடிவருகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. ஏற்கனவே நடந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நேற்றைய தினம் இந்திய அணி […]

உலகளவில் பலகோடி யூஸர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப். இது மேலும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மூலம் பயனர்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைக்க இது உதவுகிறது. இந்த வாட்ஸ்அப்-ல் இன்கமிங் கால் மற்றும் […]

திருமணம் முடிந்தவுடன் மகள் சொத்து எதையும் பெறக்கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டிய நேரம் இது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. மகளின் திருமணம் குடும்பத்தில் அந்தஸ்தை மாற்றாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் ஜே சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது சகோதரியை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அந்த மனுவில், […]

திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி புத்துச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வாங்கி, பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பெருகி வரும் வாகனங்களால், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பிஎஸ்-3, மற்றும் பிஎஸ்-4  வாகனங்களுக்கு தடை விதித்து  அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும், கடந்த 2017  முதல் பி.எஸ் 4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ் என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம் ஆகும். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில் 2000ம் ஆண்டில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில்  […]

152 அரசாணையை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேலும் வரும் மார்ச் இறுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசுக்கு எச்சரிக்கை. மதுரையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி தொழிலாளர்களுக்கு விரோதமான அரசாணை 152 -ஐ ரத்து செய்ய வேண்டும், மதுரை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பம்ப்பிங் ஸ்டேசன் பணியாளர்கள், பாதாளச் சாக்கடை பணியாளர்கள் உள்ளிட்ட 32 பேருக்கும் உடனடியாக பணி வழங்க […]

ஓயாத AK குரல், குறையாத உற்ச்சாகம், தாரை தப்பட்டை, DJ, 80 அடி கட் அவுட், மாலை என வேலூரில் தொடரும் துணிவு பட கொண்டாட்டம். கேரள செண்டை மேளம் மற்றும் தாரை தப்பட்டையுடன் வேலூரில் தொடங்கியது துணிவு பட கொண்டாட்டம். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக […]

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, நாடுகாணி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி, 2 பேரை கொன்றதால் கடந்த மாதம் 8ஆம் தேதி PM2 மாக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் முதுமலை புலிகள் காப்பகாத்தில் உள்ள சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை மீண்டும் கூடலூர் பகுதியை நோக்கி வந்துள்ளது. அதனை தடுத்து நிறுத்திய தமிழக வனத்துறையினர் […]