வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்..

rocket 2

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்று மாலை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட்டின் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.


இது இந்தியாவின் கடலோர எல்லைகளை பாதுகாக்கவும், கடற்படை மற்றும் விமானப்படை இடையிலான தொலைத் தொடர்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ரூ.1,600 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிஎம்எஸ்-03, 4,400 கிலோ எடை கொண்டது. இதன் மூலம், இது இதுவரை இந்தியாவில் இருந்து புவிசுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட அதிக எடையுள்ள செயற்கைக்கோளாக சாதனை படைத்துள்ளது.

2013 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் சேவை முடிவடையவுள்ள நிலையில், அதற்கு மாற்றாக சிஎம்எஸ்-03 வடிவமைக்கப்பட்டது. இதனால் இந்திய கடற்படையின் கண்காணிப்பு திறன் புதுமையான நுண்ணறிவுடன் மேம்படுகிறது. அதன் சக்திவாய்ந்த ஏவுதல் திறன் காரணமாக எல்.வி.எம்-3 ராக்கெட்டை “பாகுபலி ராக்கெட்” என இஸ்ரோ அதிகாரிகள் பெருமையாக அழைக்கிறார்கள்.

Read more: வீட்டில் செல்வத்தை பெருக்கும் மணி பிளான்ட்.. திருடி நட்டு வைத்தால் அதிர்ஷ்டம் சேருமா..?

English Summary

Baahubali rocket successfully launched..

Next Post

நில பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புவனாம்பிகை சமேத பூலோகநாதர் கோயில்..! எங்க இருக்கு தெரியுமா..?

Mon Nov 3 , 2025
The temple of Bhuvanambika Sametha Phulokanathar, which provides solutions to land problems..! Do you know where it is..?
38874553 boologanathar temple

You May Like