சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் ஜெகநாதன் நகரில் பரத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் முன்னுரை வயதுடைய ஹரிஹரன் என்ற ஆண் குழந்தையும் இருந்திருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரத்குமார் குளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி வைத்திருக்கிறார். அப்போது ஹரிஹரன் எதிர்பாராத விதமாக அந்த வெண்ணீரில் இருந்த பாத்திரம் அருகில் நடந்து சென்றபோது அதனை கொட்டிவிட்டான்.
இதன் காரணமாக, வெந்நீரின் சூடு தாங்க முடியாமல் குழந்தை ஹரிஹரன் வழியில் அலறி துடித்திருக்கிறான். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஹரிஹரனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், குழந்தை ஹரிஹரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.