நாடு முழுவதும் ’படார் படார்’..!! களைகட்டும் தீபாவளி..!! புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்..!!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி தவித்த மக்கள் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மக்களின் உள்ளங்களிலும், அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள் தீபாவளி. இன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் மட்டுமல்ல, சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களாலும், வெவ்வேறு காரணங்களைக் கூறி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தினரை பொருத்தமட்டில் இது தீப ஒளி திருநாள். வாழ்வில் தீமைகள் அகன்று நன்மைகளை கொண்டு வரும் நன்னாள் தீபாவளி திருநாள்.

நாடு முழுவதும் ’படார் படார்’..!! களைகட்டும் தீபாவளி..!! புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்..!!

இந்து மத புராணங்களின்படி, யாராலும் அழிக்க முடியாத, ஆனால் தாயால் மட்டுமே இவனை அழிக்க முடியும் என்ற சாகாவரம் பெற்ற அசுரன் நரகாசுரனை கடவுள் திருமாலின் அவதாரமான மகாவிஷ்ணு, மிகவும் சமயோஜிதமாக சத்தியபாமாவை அம்பெய்த வைத்து கொன்ற நாள் தான் தீபாவளி. தீமையின் வடிவமான நரகாசுரன், தான் இறக்கும் தருவாயில் தாய் சத்தியபாமாவிடம் இந்த நாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்க, சத்தியபாமாவும் மக்கள் தீபம் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவர் என்று வரம் கொடுத்த நாளென்றும், வட மாநிலங்களில் இந்து மத கடவுள் ராமன் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்கு திரும்பிவந்த நாளில், மக்கள் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வரவேற்ற நாள் தான் தீபாவளி என்றும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

நாடு முழுவதும் ’படார் படார்’..!! களைகட்டும் தீபாவளி..!! புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்..!!

தீபாவளி திருநாள் அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடைகளை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடுவர். தங்கள் வீடுகளில் செய்த இனிப்புகளை அக்கம், பக்கம் வீடுகளில் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து நல்உறவுகளை மேம்படுத்துவர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தீபஒளி திருநாளில் அனைவரின் வாழ்விலும் தீமைகள் விலகி நன்மைகள் பெறட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்…

Chella

Next Post

தீபாவளி கொண்டாட்டம்..!! 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளில் மிளிர்ந்த நதி..!! கின்னஸ் உலக சாதனை..!!

Mon Oct 24 , 2022
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தீபாவளி திருநாளை முன்னிட்டு உத்தரப்பிரதேச அரசு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அயோத்தி, லக்னோ, கோண்டா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மண்ணால் ஆன விளக்குகளை கொள்முதல் செய்யும் பணிகளும் நடைபெற்றன. கடந்த […]
தீபாவளி கொண்டாட்டம்..!! 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளில் மிளிர்ந்த நதி..!! கின்னஸ் உலக சாதனை..!!

You May Like