வங்கி மோசடி குறித்த வழக்கு | தனியார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு சிறை தண்டனை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

சென்னையை சேர்ந்த பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான பி. செந்தில்குமார், எஸ் ஜே எஸ் நிறுவன இயக்குனர்கள் டி ஆர் தனசேகர், கருணாநிதி மற்றும் ஜெயமுரளி, லதா பாஸ் ,செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்த 2008 ஆம் வருடம் போலியான ஆவணங்களை காட்டி இந்தியன் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் வந்தனர்.


இதன் மூலமாக வங்கிக்கு ரூபாய் 4.19 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவித்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ வழக்குகளுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில்குமாருக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1.25 லட்சம் அபராதம் விதித்தது.

மற்ற எல்லோருக்கும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 1.25 லட்சம் அபராதம் மற்றும் 2 நிறுவனங்களுக்கும் தலா 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Next Post

நாட்டையே உலுக்கும் ரயில் விபத்து.... மனித நேயத்தை நிலை நாட்டும் மக்கள்..! கண்களில் கண்ணீர் வரவைக்கும் ஒடிசா சம்பவம்...

Sat Jun 3 , 2023
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதி விரைவு ரயில் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோரமண்டல் ரயில் நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது, இரவு 7 மணியளவில்ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோரமண்டல் […]
train accident 3

You May Like