அடுத்தடுத்து திவாலான வங்கிகள்..!! அதிர்ந்துபோன அமெரிக்கா..!! அதிபர் முக்கிய அறிவிப்பு..!!

பொதுவாகவே ஒரு நாட்டில் உள்ள முக்கியமான வங்கிகள் திவாலாகிறது என்றால், அந்நாடு பொருளாதார சிக்கலையோ நிதிநிலை நெருக்கடியையோ விரைவில் சந்திக்கப் போகிறது என்பதையே உணர்த்தும். அதிலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ, இந்தியா போன்ற வளரும் நாடுகளிலோ வங்கிகள் திவாலாகும் போது அது சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்று, முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும். அந்த வகையில், அமெரிக்காகவில் சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட அடுத்த 48 மணி நேரத்தில் இன்னொரு வங்கியான சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டிருப்பது,அமெரிக்க முதலீட்டு சந்தையையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 210 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும், 175 பில்லியன் டாலர் டெபாசிட் உடனும் திவாலாகி உள்ளது. சிக்னேச்சர் வங்கி சுமார் 110.36 பில்லயன் டாலர் சொத்து மதிப்புடனும், 88.59 பில்லியன் டாலர் டெபாசிட் உடனும் திவாலாகி உள்ளது.

இது ஒட்டு மொத்த நிதி சந்தைகளை மோசமான நிலைக்கு கொண்டு போகும் எனவும் 2008இல் உருவான சர்வதேச நிதி நெருக்கடிக்கு இது வழிவகுக்குமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சூழ்நிலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “இதற்கு காரணமானவர்கள் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவார்கள். சிலிக்கான் வேலி பேங்க் மற்றும் சிக்னேச்சர் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அனைவருக்கும் பணம் அளிக்கப்படும். பெரிய வங்கிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் மீண்டும் இதே போன்ற நிலை மற்றொரு வங்கிக்கு உருவாகாது” என்றார்.

Chella

Next Post

"எங்க சாதி குழந்தை உன் வயிற்றில் வளர்ந்தா அது தீட்டு........." என்று கர்ப்பிணி பெண்ணிடம் வம்பிழுத்ததால் போலீஸிடம் சென்ற கர்ப்பிணி பெண்!

Mon Mar 13 , 2023
கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிப் பெண் ஒருவர் வளைகாப்பு நடத்திய கையோடு நேரடியாக காவல் நிலையம் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள தேவபண்டாலம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துச்சாமி இவரது மகள் கல்பனா. எம் பி எட் பட்டதாரியான இவர் அதே பகுதி சார்ந்த வெங்கடேசன் என்பவரை ஐந்தாண்டுகளாக காதல் செய்து வந்தார். இவர்கள் இருவரது காதலுக்கும் பெற்றோர் சம்மதிக்கவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். […]

You May Like