மன அழுத்தத்தை குறைத்து தூக்கமின்மை நோயை தீர்க்கும் சித்த மூலிகை..!

பொதுவாக தூங்குவதற்கு முன்பு பால் குடிக்கும் பழக்கம் பலரது வீடுகளிலும் இருந்து வருகிறது. அப்படியிருக்க பாலில் இந்த அஸ்வகந்தா மூலிகையை பொடியாக செய்து கலந்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும். நீண்டகாலமாக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் இந்த அஸ்வகந்தா மூலிகை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதை முக்கிய காரணமாக கருதப்பட்டு வருகிறது. இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அஸ்வகந்தா மூலிகையை அடிக்கடி எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அஸ்வகந்தா மூலிகையில் வித்தனோலைடுகள், சபோனின்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் போன்ற உயிரியல் செயல்திறன் கொண்ட வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது. இது தோலில் ஏற்படும் காயங்கள், தழும்புகள், அரிப்பு, புண்கள் போன்ற பலவற்றையும் சரி செய்து சருமத்தை பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்துக் கொள்கிறது. ஆனால் கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் தைராய்டு, நீரிழிவு நோய், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் இது போன்ற நோய்களுக்கு நீண்ட நாட்களாக மருந்துகள் எடுத்துக் கொண்டு வருபவர்கள் அஸ்வகந்தா மூலிகையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

Baskar

Next Post

சிபிஐ வசம் செல்கிறதா வேங்கைவயல் வழக்கு..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

Tue Feb 13 , 2024
வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கலாமா? என்ற கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், விசாரணை அதிகாரியாக திருச்சியை சேர்ந்த டிஎஸ்பி பால்பாண்டி இருந்தார். 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இதுவரை […]

You May Like