கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஸ்ரீ ராமாபுரம் பகுதியில் ராணி என்ற 76 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகுணா என்ற மருமகள் இருந்துள்ளார். இரு நாட்களுக்கு முன் ராணி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மருமகள் மேல் சந்தேகம் ஏற்பட அவரிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீசாருக்கு சுகுணா தக்க பதில் அளிக்கவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் தீவிரம் அடைந்தது.
இதனை தொடர்ந்து சுகுணாவிடம் மேற்கொண்ட கிடுக்கு பிடி விசாரணையில் சிலர் திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அதன்படி மாமியார் ராணி சொத்துக்களை பிரித்துக் கொடுக்காமல் இருந்து வந்தார்.
இதனால் அடிக்கடி மாமியார் மற்றும் மருமகளுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவ தினத்தில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், மாமியாரை கொடூரமாக தாக்கிய சுகுணாவால் உடனே ராணி மயங்கி விழுந்துள்ளார்.
இதில் அவர் உயிரிழந்த நிலையில் அங்கிருந்து சுகுணா தப்பியோடி விட்டார் என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சுகுணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.