மிரள வைக்கும் பறவை காய்ச்சல்…! 6,000-க்கும் மேற்பட்ட கோழிகள் அழிப்பு…!

பறவைக்காய்ச்சல் அதிகரித்து வந்த நிலைக்கு கேரளாவில் 6000-க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் பறவைக் காய்ச்சலின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று வெவ்வேறு ஊராட்சிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோயைத் தடுக்க, கோழி மற்றும் வாத்துகளை கொல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் கீழ், மாவட்டத்தில் 6,000க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை வாத்துகள் அடங்கும்.


இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பபில் மாவட்டத்தின் வெச்சூர், நினத்தூர், அற்புதரை ஊராட்சிகளில் வாத்துகள் பலியாயின. மாவட்ட நிர்வாகம் கூறுகையில், ”வெச்சூரில், மொத்தம் 133 வாத்து, 156 கோழிகளும், நினத்தூரில், 2,753 வாத்துகளும், அற்புதரையில், 2,975 வாத்துகளும் பலியாகியுள்ளன. இவற்றில், பறவை காய்ச்சல் அதிகளவில் பரவும் மரபணு நோயானது கண்டறியப்பட்டது. மறுபுறம், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, லட்சத்தீவு நிர்வாகம் அங்கு கோழி இறைச்சியை விற்கத் தடை விதித்துள்ளது.

Vignesh

Next Post

உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைச்சுற்றல் உள்ளவர்களா நீங்கள்.., அப்போ இது உங்களுக்கு தான்

Mon Dec 26 , 2022
உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கு எலுமிச்சை சாறு பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து குடிப்பதால் கல்லீரல் பிரச்சனைகள் குணமாகி கல்லீரல் வலுவடையும். எலுமிச்சம் பழச்சாறு, சீரகம், மிளகு சேர்த்துக் குடித்தால் பித்தம் குறையும். தினமும் எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து குளித்தால், சரும வறட்சி நீங்கும். எலுமிச்சையில் வைட்டமின் […]
Lemonade 1 of 1 1080x801 1

You May Like