பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை-பாஜக மாவட்ட செயலாளர் கைது

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை பார்த்த சமையலர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் தலைமறைவாக இருந்த நிலையில் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட  ஒருங்கிணைப்பாளராக கலைச்செல்வி பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில்  இருந்தபோது, திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி வந்துள்ளார். 

அப்போது மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென உணவுக்கூடத்தின் கதவை அடைத்துவிட்டு அவர், திடீரென பெண் பொறுப்பாளரிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பெண் பொறுப்பாளர் கூச்சலிட்டுள்ளார். இதனைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அச்சமடைந்த பாஜ மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து பெண் பொறுப்பாளர், சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மகுடீஸ்வரனை தேடி வந்தனர்.

அதனைத்தொடர்ந்து, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மகுடீஸ்வரன் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவரும் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்டத் தலைவர் கனகராஜ் உடனடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது தலைமறைவாக இருந்த மகுடேஸ்வரனை காவல்துறையினர் கர்நாடகாவில் கைது செய்துள்ளனர்.

Next Post

ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கு..!! CWC போட்டியாளர்களாக களமிறங்கும் 8 முக்கிய பிரபலங்கள்..!! லிஸ்ட் இதோ..!!

Thu Apr 11 , 2024
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடங்க உள்ளது. இதற்கிடையே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் அதில் இருந்து விலகியது. அதே போல் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட்டும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். வழக்கமாக ஜனவரி அல்லது […]

You May Like