பிஎம் கிசான் திட்டம்..!! விவசாயிகளே இன்றே கடைசி நாள்..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 3 தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 14-வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், 14-வது தவணை பெற இகேஒய்சி விவரங்களை இன்றைக்குள் விவசாயிகள் புதுப்பித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான அப்டேட் செய்தால் மட்டுமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும். எனவே, விவசாயிகள் அனைவரும் இகேஒய்சி விவரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் விவசாயிகள் உதவி எண் – 155261 அல்லது 1800115526 அல்லது 011-23381092 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Chella

Next Post

 யூடியூப் கிரியேட்டரா நீங்க? வருமானம் இனி ஈசிதான்..!

Thu Jun 15 , 2023
வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி என்ற காலமெல்லாம் மலையேறி போக, இப்போது ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன் என நிலைமை மாறியுள்ளது. அதில், சென்னையின் அண்ணாசாலையில் இருந்து அண்டார்டிகா வரையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும், கையடக்கத்தில் கண்முன் காட்டுகிறது யூடியூப். இதனால், தான், சமூக வலைதள கணக்குகள் இல்லாத நபர்களை கூட பார்க்க முடிகிறது. தனிநபருக்கான தொலைக்காட்சி எனும் வகையில் உலக அளவில், யூடியூப் பயன்பாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பார்வையாளர்களின் பொழுதுபோக்கு […]

You May Like