வடக்கு சைப்ரஸ் கடற்கரை அருகே சுமார் 270 பயணிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 237 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தசுக்கு (Tasucu) துறைமுகத்திற்குச் சென்ற ‘காடமரன்’ (Catamaran) வகைப் படகு விபத்துக்குள்ளானது. படகு புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே, மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாகப் படகில் நீர் புகத் தொடங்கியது. டயானா கடற்கரையிலிருந்து சுமார் 7.5 கிலோமீட்டர் தொலைவில் படகு முற்றிலுமாக கவிழ்ந்தது.
இந்தப் படகில் பயணம் செய்த 270 பேரில், இதுவரை 237 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 24 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வடக்கு சைப்ரஸ் பிரதமர் உனல் உஸ்டெல் தெரிவித்துள்ளார்.
இதேபோல, கடந்த ஜூலை மாதம் வியட்நாமில் நடந்த மற்றொரு படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த செய்தியும் தற்போது கவனம் பெற்றுள்ளது. குறைந்த செலவில் சொகுசுப் பயணம் மற்றும் எளிமையான விசா நடைமுறைகள் காரணமாக, இந்தியர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக வியட்நாம் திகழ்கிறது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 7.46 லட்சம் இந்தியர்கள் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



