மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு… 3 பேர் படுகாயம்…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதி…!

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உள்ளூர் பஞ்சாயத்தின் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரின் சகோதரர் உட்பட குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்தனர்.


பிர்பூம் மாவட்டத்தின் மார்கிராம் கிராமத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ராம்பூர்ஹாட் துணைப் பிரிவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெடிவிபத்தை தொடர்ந்து, அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், ராம்பூர்ஹாட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கச்சா குண்டுகளை வீசியதை அடுத்து, பீர்பூமில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் டிஎம்சி பஞ்சாயத்து தலைவர் படு பிரதான் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

டைட்டானிக் படத்தின் ஹீரோ உயிர் பிழைத்திருக்கலாம்..? 25ஆண்டுகளுக்கு பின் ஜேம்ஸ் கேமரூன் சொன்ன ரகசியம்...!

Sun Feb 5 , 2023
டைட்டானிக் கப்பலில் இறுதியாக லியானார்டோ டிகாப்ரியோ(ஜாக்) உயிர் பிழக்கை ஒரு வழி இருந்ததாக தனது அறிவியல் ஆய்வு மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார். 1912ம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் ‘டைட்டானிக்’ என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில், 1500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த விபத்து […]
TITANIC

You May Like