மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உள்ளூர் பஞ்சாயத்தின் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரின் சகோதரர் உட்பட குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
பிர்பூம் மாவட்டத்தின் மார்கிராம் கிராமத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ராம்பூர்ஹாட் துணைப் பிரிவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெடிவிபத்தை தொடர்ந்து, அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், ராம்பூர்ஹாட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கச்சா குண்டுகளை வீசியதை அடுத்து, பீர்பூமில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் டிஎம்சி பஞ்சாயத்து தலைவர் படு பிரதான் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.