எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து சிறுவன் பலி

மஹாராஷ்டிராவில் வீட்டில் எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தபோது திடிரென பைக் பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மஹாராஷ்டிராவின் பல்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தபோது 7 வயது சிறுவன் ஷபீர் அன்சாரி என்ற சிறுவன் ஸ்கூட்டர் அருகில் நின்றிருந்தான். அன்சாரியின் பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றார். அன்சாரியின் தந்தை ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட ஸ்விட்ச் போர்டில் கனெக்ட் செய்துவிட்டு அவரும் தூங்க சென்றுவிட்டார். அப்போது சிறுவன் அருகில் விளையாடிக் கொண்டிருக்கையில் திடீரென பேட்டரி வெடித்து தீ மள மளவென பரவியது. இதில் சிறுவன 70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினார் உடனடியாக தீயை அனைத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டான்.


ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக மாணிக்பூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றது. பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் எலக்ட்ரிக் பைக் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதே போல பல சம்பவங்களில் எலக்ட்ரிக் பைக் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

விபத்து நடந்த பைக்கின் பேட்டரி லித்தியம் ஃபெர்ரோ பாஸபேட் பேட்டரி . அதிக அளவு சூடேறியதால் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் ஸ்கூட்டர் தயாரித்த நிறுவனம் போலியான மற்றும் குறைபாடுள்ள பேட்டரியை பொருத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இதே போல எலக்ட்ரிக் பைக் வெடித்து விபத்து ஏற்பட்டது.

Next Post

மனைவியிடம் மாத சம்பளம் பற்றி தெரிவிக்காத கணவன் … மனைவி என்ன செய்தார் தெரியுமா?

Mon Oct 3 , 2022
மனைவியிடம் மாத சம்பளம் எவ்வளவு என கணவன் தெரிவிக்காததால் சட்டத்தை நாடி தெரிந்துகொண்டுள்ளார். சில கணவன்மார்கள் தனது சம்பளம் குறித்த தகவலை மனைவியிடம் பகிர்ந்து கொள்வதில்லை. ஒருவேளை திருமண உறவு முறியும் தருவாயில் வழக்கறிஞர் மூலம் கேட்டுப் பெறலாம். ஆனால் கணவனுடன் வாழும் நிலையில் அவரது ஊதியம் குறித்த தகவலை கணவன் தெரிவிக்கவில்லை என்றால் அதற்கும் வழி உள்ளது. அது தான் ஆர்.டி.ஐ. சட்டம் . சஞ்சு குப்தா என்பவர் […]
ஆர்.டி.ஐ.

You May Like