இந்தியாவின் லடாக் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது. லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.39 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் நீளம் 75.40ஆகவும் பதிவாகியுள்ளது.