தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
இதில், 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. மிகவும் குறைந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 39, பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக மதுரையில் 511 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும், புதிய தொழில்நுட்பத்தில் உள்ள மார்க் 3 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Read More : ’பெண்களுக்கு பிரச்சனை என்றால் என் மனைவி பத்ரகாளியாக மாறிவிடுவார்’..!! அன்புமணி ஒரே போடு..!!