’பெண்களுக்கு பிரச்சனை என்றால் என் மனைவி பத்ரகாளியாக மாறிவிடுவார்’..!! அன்புமணி ஒரே போடு..!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக கூட்டணியுடன் கைகோர்த்துள்ள பாமக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தருமபுரியில் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்களும் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட கணவர் அன்புமணி ராமதாஸ், ”பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக சென்று நியாயத்தை பெற்று தருபவர் சௌமியா அன்புமணி. அதுல மட்டும் அவர் விட்டுக் கொடுக்க மாட்டார். பெண்களுக்கு பிரச்சனை என்றால் அவர் பத்ரகாளியாக மாறிடுவார். அவ்வளவு கோபம் வரும். அதுவும் பெண் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் போராட்டம் நடத்துங்கள் என்று அவர் சொல்லுவார்.

அப்படிப்பட்டவரை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் மாற்ற வேண்டும். இது என்னுடைய ஆசை மட்டும் அல்ல. இது உங்களுடைய ஆசையாகவும் இருக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். எதிர் அணியில் உள்ள வேட்பாளரை நான் மதிக்கின்றேன். ஆனால், அவருக்கு அனுபவம் கிடையாது உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்” என்றார்.

Read More : School Bus | பள்ளி வாகனங்களில் இனி கட்டாயம்..!! அதிரடியாக பறந்த உத்தரவு..!! பெற்றோர்கள் நிம்மதி..!!

Chella

Next Post

BREAKING | தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை..!! மதுரை தான் டாப்..!! சத்யபிரதா சாஹூ அறிவிப்பு..!!

Thu Apr 4 , 2024
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். இதில், 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. மிகவும் குறைந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 39, பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக மதுரையில் 511 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும், புதிய தொழில்நுட்பத்தில் […]

You May Like