fbpx

காசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் வெளியேறினர்!… ஐ.நா. தகவல்!

காசாவிலிருந்து போர் தொடங்கியது முதல் 7 நாட்களில் மட்டும் இதுவரை 10 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் படைகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போரானது 10 வது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து பதிலடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகரை முற்றிலும் உருகுலைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான காசா நகர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், காசாவிலிருந்து போர் தொடங்கியது முதல் 7 நாட்களில் மட்டும் இதுவரை 10லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஐ.நாவின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலியட் டூமா இதுகுறித்து தெரிவித்த தகவலில், காசாவில் போர் தொடங்கியது முதல் 7 நாட்கள் வரை மட்டும் இதுவரை 1 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். 

Kokila

Next Post

உருக்குலைந்த காசாவின் அவலம்!… நீரின்றி மக்கள் திண்டாட்டம்!… குளித்துவிட்டால் குடிப்பதற்கு நீர் இருக்காது என வேதனை!

Tue Oct 17 , 2023
இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் குடி தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை தடை செய்தனர். இஸ்ரேல் படைகளின் அட்டூழியத்தால் காசா பகுதிகள் முழுவதும் உருக்குலைந்தது. மக்கள் எங்கே செல்வதென்று தெரியாமல் பலர் திகைத்து நின்றனர். உணவு, உடை, இருப்பிடம், நீரின்றி ஆங்காங்கே மக்கள் அவதியடைந்தனர். இதனால் பாலஸ்தீனத்தில் வாழும் மக்கள் குடிக்க, குளிக்க, அத்தியாவசியத் தேவைகளுக்காக தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை […]

You May Like