fbpx

தீவுத்திடலில் கேப்டன்…! அலைமோதும் கூட்டம்… பொதுமக்கள் அமர 1000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைப்பு….!

விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு பொது மக்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இங்கு உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அமர்வதற்காக 1000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான பொதுமக்கள் தீவுத்திடலுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.

Vignesh

Next Post

வெள்ளத்தில் இழந்த ஆவணங்கள்!… நெல்லை மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்!

Fri Dec 29 , 2023
நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி (சனிக்கிழமை) 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று சான்றிதழ் நகல்களைப் பெற்றுக்கொள்ளலாம். பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றின் நகல்களைப் பெற ஏதுவாக இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு […]

You May Like