இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் 11,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது… இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.. நேற்று ஒரு நாளில் கொரோனா காரணமாக 27 பேர் உயிரிழந்தனர்.. கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,720 ஆக உள்ளது… இறப்பு விகிதம் 1.19% ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் நாட்டில் வழங்கப்பட்டுள்ளன. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களில் அதிக பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.