கோவை பீளமேட்டில் இயங்கி வந்த யு டி எஸ் என்ற நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி சுமார் 76 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தபடி பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் வழங்கினர்.
அதன் பேரில் டிஎஸ்பி முருகானந்தம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் மொத்த மோசடி தொகை 1300 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கின்ற நிலையில் 31 பேர் மட்டுமே புகார் புகார் வழங்கியிருக்கிறார்கள் இதனைத் தொடர்ந்து, 76000 பேரின் விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சேகரித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு நடுவே தலைமறைவாக இருந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் சூலூரை சேர்ந்த ரமேஷ்(30) என்பவர் கடந்த 6ம் தேதி கோவை டான் ஃபிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகு அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சரணடைந்த ரமேஷை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை காவல்துறையினர் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.