fbpx

இளைஞருடன் ஏற்பட்ட முன் விரோதத்தால்…..! மகளை வைத்து தாய் செய்த கேவலமான செயல்….!

சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் ஒரு 14 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுமி தனக்கு எந்த விதமான பாலியல் தொந்தரவும் நடைபெறவில்லை. என்னுடைய தாய்க்கும், அந்த வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. அவரை பழிவாங்குவதற்காகவே அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக என்னுடைய தாய் பொய்யான புகாரை வழங்கி இருக்கிறார். என்று அந்த சிறுமி ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த சிறுமியின் தாயாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் உண்மையை கூறிய சிறுமிக்கு அவருடைய தாயாரால் பாதிப்பு ஏற்படும் என்று கருதி அந்த சிறுமையை மீட்டு அரசு காப்பகத்தின் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதற்கு நடுவே சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பொய் புகாரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Post

ரூ.20,55,000 கடன் வழங்கும் மத்திய அரசு..? உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்துருக்கா..? மக்களே அலெர்ட்..!! உண்மை இதுதான்..!!

Tue Jun 13 , 2023
“பிரதம மந்திரி முத்ரா யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.20,55,000 கடன் வழங்குவதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. ”பிரதம மந்திரி முத்ரா யோஜனா 2023” திட்டன் கீழ் ரூ.20,55,000 கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், குடிமக்கள் தங்களின் செல்போன் எண்களைச் சரிபார்த்து, சில நிமிடங்களில் கடன் தகுதியைச் சரிபார்க்க வேண்டுமெனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வைரலாகி வரும் இந்த செய்தி போலியானது என்பதை மக்கள் கவனத்தில் […]
ரூ.20,55,000 கடன் வழங்கும் மத்திய அரசு..? உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்துருக்கா..? மக்களே அலெர்ட்..!! உண்மை இதுதான்..!!

You May Like