fbpx

சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!… லேசர் ஒளி, பலூன்கள் பறக்கவும் தடை!… டிஜிபி அறிவிப்பு!

144 Prohibition: சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை லேசர் ஒளி, பலூன்கள் உள்ளிட்ட பொருட்கள் எதையும் பறக்க விடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நாளை, வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் இந்த 144 தடை உத்தரவால் பரபரப்பு நிலவுகிறது. முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் திரைப்பட நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவ்வபோது விமானநிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 144 தடை உத்தரவு பார்க்கப்படுகிறது.

Readmore: முக்கிய அறிவிப்பு…! EPFO ஆவணத்தில் பெயர் உள்ளிட்ட அனைத்தும் திருத்தம் செய்யலாம்…!

Kokila

Next Post

அரசியல் பிரளயம்!… மோடி ஜாதகத்தில் ஏழரை!... ஆட்சிக்கே வந்தாலும் பிரதமராக முடியாது!… திமுகவுக்கு என்ன நிலைமை தெரியுமா?… ஜோதிடர் கணிப்பு!

Mon Jun 3 , 2024
Modi: நாளை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து பிரபல ஜோதிடர் சச்சின் மல்ஹோத்ரா கணித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கின்றன. இதேபோல், மற்ற கட்சிகளின் வாக்கு சதவீதமும் அதிகரித்து காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், பிரபல ஜோதிடர் சச்சின் மல்ஹோத்ரா, முந்தைய தேர்தல்களுடன் […]

You May Like