நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
பேருந்தில் , நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் போது , எச்சில் தொட்டு பயணச்சீட்டை கிழித்து வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து பயணிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை அரசு தரப்பில் மேற்கொள்ளவில்லை. தற்பொழுது புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பேருந்தில் பயணச்சீட்டு வழங்கும் போது சில நடத்துநர்கள் எச்சில் தொட்டு பயணச்சீட்டுகளை பிரித்தெடுத்து பொதுமக்களிடம் வழங்குவதாக புகார்கள் பெறப்படுவதால் நடவடிக்கை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பேருந்தில் மகளிர் பயணிக்கும் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது. நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடம் இல்லை என பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் செயல்பட்டால் நடைவடிக்க எடுக்கப்படும் என போக்குவரத்து துறை சமிபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.